ரவிசுப்பிரமணியன் (Ravisubramaniyan) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளரும், கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமாவார். நாற்பதாண்டுகளாக கவிதைகள் எழுதிவருகிறார்.[1] சிறந்த படைப்பாளுமைகளை ஆவணப்படங்களில் பதிவுசெய்பவராக, இசைஞராக அறியப்படுகிறார். சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து, பாடி, மேடையேற்றியும் வருகிறார்.
பன்முகம்
கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் முதுகலைப் பொருளியல் (1983-85) பயின்றவர். கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள்,[2] ஆவணப்படங்கள் என்ற நிலையில் இவரது பங்களிப்புகள் உள்ளன. சிறுகதைகளும் எழுதிவருகிறார். பாவலர் இலக்கிய விருது, சாரல் இலக்கிய விருது, அகல் இலக்கிய விருது, சென்னை இலக்கியத் திருவிழா விருது போன்ற விருதுகள் வழங்கும் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். பல தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளுக்கு இசையமைத்துள்ளார். 80க்கு மேற்பட்ட நவீனக் கவிதைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார். சாகித்திய அகாதமி ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக (2003-2007) இருந்துள்ளார். இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. லெனினிடம் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குனராகவும், விஜய் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி இயக்குனராகவும், முதுநிலை செய்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக கலை, இலக்கியப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
65 ஆவது தேசிய திரைப்பட விழாவின் விருதுக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[3] தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு இலக்கிய ஆளுமையாக உள்ளார்.
விதானத்துச் சித்திரம் (கவிதைத்தொகுப்பு), போதிவனம் பதிப்பகம், சென்னை, 2017 [5][6][7]
That was a different season, (Selected poetry of Ravisubramaniyan, English Translation R.Rajagopalan), Authors Press, (ரவிசுப்பிரமணியனின் 51 தமிழ்க்கவிதைகளின் நூல் வடிவம். மொழியாக்கம் ஆர்.ராஜகோபாலன்) [8]
பாலசந்தரைப் பற்றிய ஆவணப்படத்தை சூலை 9ஆம் நாளான அவரது 90ஆம் பிறந்த நாளில் தயாரித்து வெளியிட, கவிதாலயா நிறுவனம் இவரைத் தெரிவு செய்துள்ளது. தற்போது இந்த ஆவணப்பட உருவாக்க முயற்சியில் உள்ளார்.[20]
குறுந்தொகையில் உள்ள பிரிவுத்துயரைக் கூறுகின்ற கீழ்க்கண்ட மூன்று பாடல்களுக்கு மெட்டு அமைத்துள்ளார். திவாகர் சுப்பிரமணியம் பின்னணி இசை அமைக்க அனுக்கிரகா ஸ்ரீதர் பாடியுள்ளார்.[24]