ராஜசேகர் (நடிகர்)
ராஜசேகர் (19 ஆகத்து 1957 – 8 செப்டெம்பர் 2019) ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், திரைப்பட, சின்னத்திரை நடிகரும் ஆவார். அத்துடன் திரைக்கதை எழுத்தாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2] ஒளிப்பதிவாளர்ராஜசேகர் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து ஒளிப்பதிவு பயிற்சி பெற்றார். உடன் பயின்ற இராபர்ட் ஆசீர்வாதம் என்பவருடன் இணைந்து ஜெயபாரதியின் இயக்கத்தில் 1979 இல் வெளிவந்த குடிசை திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்த திரைப்படங்கள்: இயக்குநர்பின்னர் இராபர்ட்டுடன் இணைந்து சுஹாசினி நடிப்பில் 1981 இல் வெளிவந்த பாலைவனச்சோலை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியளித்தது.[1][2] இருவரும் இணைந்து இயக்கிய திரைப்படங்கள்:
திரைக்கதை எழுத்தாளர்
நடிகர்
சின்னத்திரை நடிகர்
தனிப்பட்ட வாழ்க்கைமனசுக்குள் மத்தாப்பூ படத்தில் டாக்டர் கீதா என்ற பாத்திரத்தில் நடித்த சரண்யாவை மணந்துகொண்டார். அந்த மணவாழ்வு நீடிக்காமல் மணமுறிவு ஏற்பட்டது. பின்னர் தாரா என்பவரை மணந்து தன் இறுதி காலம்வரை அவருடன் வாழ்ந்தார்.[3] சில நாட்களாக உடல் நலக் குறைபாட்டால், சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் 2019 செப்டம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.[1][2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia