வானம்பாடி (திரைப்படம்)
வானம்பாடி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், தேவிகா, ஆர். முத்துராமன் போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். கண்ணதாசன் தயாரித்த இத்திரைப்படம் சேஷ் பரிசய் என்ற வங்காள மொழி திரைப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இப்படம் வணிகரீதியாக வெற்றியும் பெற்றது. நடிப்பு
தயாரிப்புகவிஞர் கண்ணதாசன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.[1] இந்த படம் வங்காள மொழியில் வெளி வந்த சேஷ் பரிசய் என்ற திரைப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.[2] இப்படத்தை ஜி. ஆர். நாதன் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகை ஜோதிலட்சுமி இந்த படத்தில் வரும் 'யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என்ற பாடலில் நடித்ததின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.[3] டி. ஆர். ராஜகுமாரி நடித்த கடைசித் திரைப்படம் இதுவாகும்.[4] வெளியீடுவானம்பாடி மார்ச் 9,1963 அன்று வெளியானது. இப்படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.[5] பாடல்கள்
கே. வி. மகாதேவன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது. "கங்கைகரை" என்ற பாடல் அபேரி ராகத்தை அடிப்படையாகக் கொண்டது. "தூக்கண்ணா குருவி" பாடலானது சாருகேசியுடனான சுத்த தண்யாசி ராகம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia