வா. மு. சேதுராமன்வா. மு. சேதுராமன் (V. M. Sethuraman) என்பவர் ஓர் தமிழறிஞர், கவிஞர், தமிழ் உரிமை செயற்பாட்டாளர் ஆவா். வாழ்க்கைக் குறிப்புஇவர் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள ஆண்டநாயகபுரம் என்னும் ஊரில் 1935ஆம் ஆண்டு பிறந்தார். ஏழ்மையில் வளர்ந்தாலும், சுயமுயற்சியால் தமிழ் வித்துவான், முதுகலை எம்.ஏ., பி.எட். படித்துத்தேறி 1988-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் (பி.எச்.டி.) பட்டம் பெற்றார். திருவல்லிக்கேணி முசுலீம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவர் மகன் வ. மு. சே. முத்துராமலிங்க ஆண்டவர் ஆவார். எழுத்துப்பணிதமிழ்ப்பணி என்னும் சிற்றிதழை நடத்திவருகிறார். படைப்புகள்
விருதுகள்இவருக்கு பல்வேறு அமைப்புகளாலும், தனி நபர்களாலும் பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி, ஐயப்பன் அருள்கவி, கவிஞர் குலத் திலகம், செந்தமிழ்க் கொண்டல் போன்ற பட்டங்கள் வழங்கபட்டுள்ளன. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைமாமணி விருதினை 1989-1990ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது. 2001ஆம் ஆன்டு தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் திருவள்ளுவர் விருது இவருக்கு வழங்கபட்டது.[3] தினத்தந்தி பத்திரிக்கை சார்பாக இவருக்கு ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் ‘‘விருது’’ 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த விருது வெள்ளிப் பட்டயத்துடன் ரூ 3 இலட்சம் ரொக்கப்பரிசு கொண்டது.[4][5] பார்வை நூல்
மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia