விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா (9 மே 1989) (Vijay Deverakonda) தெலுங்கு சினிமாவில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர். விஜய் தேவரகொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபுவின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா (2011) மூலம் அறிமுகமானார்[2] , ஆனால் அவர் யெவடே சுப்பிரமணியம் (2015) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார் . விஜய் 2016 பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படமான பெல்லி சூப்புலுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு என விருது பெற்றார் . விஜய் தெலுங்கு சினிமா வின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், அர்ஜுன் ரெட்டி (2017), மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்) (2018), ரஸ்மிகாவுடன் நடித்த கீத கோவிந்தம் (2018), மற்றும் டாக்ஸிவாலா (2018), போன்றவை அதிக வசூல் செய்த அவரின் தெலுங்கு படங்களின் பட்டியல். அர்ஜுன் ரெட்டிஇல் அவரது நடிப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றது.[3][4] ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விவிஜய் தேவரகொண்டா தெலுங்கு தொலைக்காட்சி இயக்குநர், தேவரகொண்டா கோவர்தன் ராவ் மற்றும் தேவரகொண்டா மாதவி ஆகியோருக்கு தெலங்கானா மாநிலம், நகர்கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை இல் பிறந்தார். பள்ளிப்படிப்பை 1. ஸ்ரீ சத்ய சாய் ஹையர் செகண்டரி ஸ்கூல், புட்டபர்த்தி. 2. லிட்டில் ஃபிளவர் ஜூனியர் ஸ்கூல் , ஹைதராபாத். ஆகிய பள்ளிகளில் முடித்தார். மற்றும் பத்ருக்கா காலேஜ் ஆஃப் காமர்ஸ்,ஹைதராபாத் ல் தனது பி.காம் பட்டப்படிப்பை முடித்தார். தொழில்ஆரம்பகால வாழ்க்கை மற்றும் போராட்டம் (2011-2015)2011 ஆம் ஆண்டில் ரவி பாபுவின் காதல் நகைச்சுவை நுவ்விலாவில் நடித்ததன் மூலம் தேவரகொண்டா திரைப்பட துறையில் அறிமுகமானார், பின்னர் சேகர் கம்முலாவின் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (2012 திரைப்படம்) படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். இந்த இரு படங்களும் வெற்றிகரமான படங்களாக அமைந்தன. ஆனால் தேவரகொண்டாவிற்கு இதன் மூலம் அங்கீகாரம் கிடைக்கவில்லை.[5] பின்னர், அவர் அந்த நேரத்தில் உதவி இயக்குனரான நாக் அஸ்வின் உடன் அறிமுகமானார், அது தேவரகொண்டா, நாக் அஸ்வினின் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான யெவடே சுப்பிரமணியம் படத்தில் நடிகர் நானி உடன் துணை வேடத்தில் நடிக்க காரணமாக அமைந்தது.[6] இப்படத்தை தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளரான அஸ்வினி தத் மகள்கள் தயாரித்தனர். பிரியங்கா தத் அவரை ஆதரித்தார், படப்பிடிப்பு தொடங்கியதும், ஸ்வப்னா தத் அவரைத் தனது பட நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமாக்கி கையெழுத்திட்டார்.[7][8] இந்தப் படம் விமர்சன மற்றும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது, மேலும் தேவரகொண்டா தனது கற்பனையும் ஆற்றலும் வெளிப்படுத்தி திரைப்படத்தில் நடித்ததற்காகவும் பாராட்டுக்களைப் பெற்றார். இந்தப் படம் இறுதியாக அவருக்கு தெலுங்கு சினிமாவில் உரிய இடத்தை கொடுத்தது. திருப்புமுனை மற்றும் வெற்றி (2015 - தற்போது வரை)தருண் பாஸ்கர் தாசையம் இயக்கிய பெல்லி சூப்புலு படத்தில் விஜய் முதன்முறையாக முன்னணி பாத்திரத்தில் நடித்தார்.நடிகையாக ரிது வர்மா நடித்துள்ளார்.இருவரின் இயல்பான நடிப்பால் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[9] இது 64 வது தேசிய திரைப்பட விருதுகள் இல் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது பெற்றது மற்றும் பிலிம்பேர் சிறந்த படத்திற்கான விருது - தெலுங்கு ஆகிய விருதும் கிடைத்தது. ஒரு சோம்பேறி சமையல்காரரின் யதார்த்தமான சித்தரிப்புக்காக அவர் பாராட்டுக்களைப் பெற்றார்.பின்னர் அவர் 2017 இல் துவாரகா என்ற மசாலா என்டர்டெய்னரில் நடித்தார். இது எதிர்மறையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. அவரது அடுத்த படம் அர்ஜுன் ரெட்டி மிகவும் தைரியமாகவும் தீவிரமாகவும் கதை இருந்ததற்காக பாராட்டுகளையும் விமர்சனத்தையும் பெற்றது. சுய அழிவு, குறுகிய மனநிலை மற்றும் குடிப்பழக்கம் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணராக விஜய் சித்தரிக்கப்பட்டது விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது, இது அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு உட்பட பல விருதுகளை வென்று தந்தது.[10][11] அர்ஜுன் ரெட்டியைத் தொடர்ந்து "யே மந்திரம் வீசாவே" படம் 5 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் இறுதியாக வெளியிடப்பட்டது. இது விமர்சகர்களிடமிருந்து மோசமான விமர்சனங்களை வழங்கியது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை. பின்னர் அவர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள வாழ்க்கை வரலாற்று காலப்படமான "மகாநடி" (தமிழில் நடிகையர் திலகம்) இல் நடித்தார். அதில் ஒரு கவர்ச்சியான மற்றும் எளிய புகைப்படக் கலைஞராக நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டில் தேவரகொண்டாவின் அடுத்த வெளியீடு கீதா ஆர்ட்ஸ் ன் 'காதல் நகைச்சுவை' படமான கீத கோவிந்தம் (திரைப்படம்), இதில் அவர் ஒரு அப்பாவி மற்றும் பதட்டமான கல்லூரி பேராசிரியராக நடித்தார். அர்ஜுன் ரெட்டியில் ஆக்ரோஷமான பாத்திரத்திற்குப் பிறகு இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தேவரகொண்டா பாராட்டு பெற்றார். இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இது 5 கோடி பட்ஜெட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்டது. அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான அவரது அடுத்த படம், அரசியல் த்ரில்லர் நோட்டா, இயக்கியது இருமுகன் (திரைப்படம்) - புகழ் ஆனந்த் சங்கர். இது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் ஒரு பேரழிவாக முடிந்தது.[12] அவரது அடுத்த படம் யு.வி. கிரியேஷன்ஸின் 'சூப்பர்நேச்சுரல் காமெடி த்ரில்லர்' 'டாக்ஸிவாலா' 'இதில் விஜய் வைத்திருந்த காரை சுற்றி நடக்கும் கதையாக இது அமைந்தது, இதன் நடிகை மாளவிகா நாயர் ஆவார் . நவம்பர் 2018 நிலவரப்படி, விஜய் தற்போது மீண்டும் ராஷ்மிகா மந்தண்ணா உடன் 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்து உள்ளார். மேலும் கிராந்தி மாதவ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் ராஷி கன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இசபெல் லைட் ஆகியோருடன் இணைந்து நடித்து உள்ளார்.[13] அவர் அடுத்ததாக ஹீரோ என்ற தெலுங்கு படத்தில் (தமிழ் மற்றும் மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட உள்ளது)இரு சக்கர வாகன பந்தய வீரர் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை குற்றமே தண்டனை மற்றும் காக்கா முட்டை போன்ற படங்களின் இணை எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை இயக்குகிறார். படத்தில் மாளவிகா மோகனன் என்பவர் விஜய்யின் காதலி பாத்திரத்தில் தோன்றுகிறார்.[14][15] 2018 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்கள் வரிசையில் 72 வது இடத்தைப் பிடித்து புகழ்பெற்றார்.[16] திரைப்பட வரலாறு
• அனைத்து திரைப்படங்களும் தெலுங்கு மொழியில் உள்ளன, மற்றவை வேறு வகையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia