கீத கோவிந்தம்கீத கோவிந்தம் (சமஸ்கிருதம்: गीत गोविन्द) ("கோபியர் பாடல்") பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு காவியம் ஆகும். இதனை பொ.ஊ. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவர் இயற்றினார். பக்தி இலக்கியத்தின் முக்கியமான நூலாகவும், சமஸ்கிருத கவிதை நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது இந்நூல். சமஸ்கிருதத்தில் காவியங்கள் இரண்டு வகைப்படும். அவை சாதாரண காவியம், மற்றும் மஹா காவியம் ஆகும். கீத கோவிந்தம் மஹா காவியம் வகையைச் சார்ந்ததாகும்.[1][2][3] இதன் ஒவ்வொரு பாகமும் 24 பிரபந்தங்களை அடக்கியதாகும். ஒவ்வொரு பிரபந்தத்திலும் எட்டு இருவரிச் செய்யுள்கள் இருக்கும். அதனால் இவற்றுக்கு அஷ்டபதி என்றும் பெயர். 'சந்தன சர்சித நீல களேபர' என்று துவங்கும் அஷ்டபதி, நாட்டியங்களிலும் மற்றும் இசை அரங்குகளிலும் இன்றளவும் மிகவும் பிரபலம். 1792 இல், சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் முதல்முதலில் இந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இலட்சணம்![]() ![]()
அஷ்டபதியின் தனிப்பெருமைஇந்திய சங்கீத சாஸ்திர நூல்களில் காலத்தால் முந்தியதென்று வழங்கும் சாரங்கதேவருடைய சங்கீத ரத்னாகரத்துக்கும் ஏறக்குறைய 200 வருடங்கள்க்கு முந்திய சங்கீத முறையை அஷ்டபதி விளக்குகின்றது. எனவே தென்னிந்தியாவும், வட இந்தியாவும் அடங்கியுள்ள பாரத நாட்டின் வெகு புராதன இசைநூல் இதுவாகும். இவற்றையும் பார்க்கவும்வெளி இணைப்புகள்இங்கே ஆங்கில மொழியாக்கமும், அதன் விரிவுரையும் மின்னூல் வடிவில் கிடைக்கிறது பரணிடப்பட்டது 2007-03-08 at the வந்தவழி இயந்திரம் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia