விஷ்ணுகோப மகாதிராயன்
விஷ்ணுகோப மகாதிராயன் கங்க வம்சத்தின் 4வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூறும் சான்றுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இவர் அரிவர்ம மகாதிராயனின் மகன் என்றும் , என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1] தலவன்புரம்கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், சதுரங்க சேனைகளைக் கொண்டு பல தேச மன்னர்களை வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும், கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெற்றும், தர்மம் என யார் வந்து கேட்டாலும் அவர்களுக்கு இல்லை என்று சொல்லாது தானம் செய்தான் எனவும், அநேக கவிஞர்களை தனது அரசவையில் வைத்து ஆதரித்து வந்தான் எனவும் அறியமுடிகிறது.[2] சமயமாற்றம்இவன் மற்ற கங்க வம்ச அரசர்களைப் போல அல்லாமல் விஷ்ணு மீது அதிக பக்தி கொண்டு பல விஷ்ணு ஆலயங்களைக் கட்டினான். இவ்வரசனுக்கு பிள்ளை இல்லாததால் தத்து எடுத்துக்கொண்டான் எனக் கூறுகிறது. கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1] சான்றாவணம்ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia