விஷ்வநாத் சர்மா
ஜெனரல் விஷ்வநாத் சர்மா (General Vishwa Nath Sharma), PVSM, AVSM, (பிறப்பு: 4 சூன் 1930) இந்தியத் தரைப்படையின் 14வது தலைமைப் படைத்தலைவராக 1988 முதல் 1990 முடிய பணியாற்றியவர்.[2] [3] குடும்பம்இவரது தந்தை மேஜர் ஜெனரல் அமர்நாத் சர்மா பிரித்தானிய இந்தியா இராணுவத்தில் பணிபுரிந்தவர். இவரது இளைய சகோதரர் மறைந்த மேஜர் சோம்நாத் சர்மா 1947-48 இந்திய-பாகிஸ்தான் போரில் வீரதீரமாகப் போரிட்டு வீரமரணம் அடைந்தார். மறைவிற்குப் பின் சோம்நாத் சர்மாவிற்கு பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது. இவரது மற்றொரு சகோதரர் சுரேந்திர நாத் சர்மா இந்திய இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவில் லெப்டினன்ட் ஜெனராலாக பணியாற்றியவர்.[4] பெற்ற விருதுகள்இராணுவ வாழ்க்கைவிஷ்வநாத் சர்மா தேராதூனில் உள்ள இந்திய இராணுவ அகாதமியில் 4 சூன் 1950 அன்று இராணுவ அதிகாரியாக பயிற்சி முடித்தவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 மற்றும் 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்களில் பங்காற்றியவர். 1 மே 1988 அன்று இந்தியத் தரைப்படையின் தலைமைப் படைத்தலைவராக பதவி உயர்வு பெற்றார்.[5] 30 சூன் 1990 அன்று இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia