1817-1818 பெரும் கிளர்ச்சி
1817-1818 பெரும் கிளர்ச்சி (Great Rebellion of 1817–1818), அல்லது 1818 ஊவா-வெல்லச எழுச்சி (Uva-Wellassa Uprising), அல்லது சுருக்கமாக ஊவா கிளர்ச்சி (Uva Rebellion) என்பது இலங்கையில் பிரித்தானியப் பேரரசுடன் நடத்தப்பட்ட கண்டிப் போர்களின் மூன்றாவது போரைக் குறிக்கும். இது அன்று கண்டி இராச்சியத்துடன் இருந்த இன்று ஊவா மாகாணம் என அழைக்கப்படும் பகுதியில் இடம்பெற்றது. மேல் நாட்டு சிங்களவர் என அழைக்கப்படும் உடரட்ட என்ற பகுதியைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஆளுநர் ரொபர்ட் பிரவுன்ரிக் தலைமையிலான பிரித்தானியக் குடியேற அரசுடன் இப்போர் இடம்பெற்றது.[1] 1818ம் ஆண்டுக் கலகம் இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியத்துவமான கலகமாக கொள்ளப்படுகின்றது. இந்தக்கலகத்தை பிரித்தானியப் படையினர் அடக்கினாலும்கூட, இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிலையாகக் கொள்ளப்படுகின்றது. இக்கலகம் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதல் கலகமாகவும் கொள்ளப்படுகிறது. பின்னணிகண்டி இராச்சியத்தின் விக்கிரம ராஜசிங்க மன்னனைப் பதவியில் இருந்து அகற்ற, கண்டி மக்கள் பிரித்தானியருக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும், அவர்களின் ஆட்சி தொடர்வதை மக்கள் விரும்பவில்லை. மக்கள் மன்னாராட்சியை விரும்பினாலும், வேறொரு கண்டத்தில் மன்னர் இருந்து ஆட்சி செய்வதை மக்கள் விரும்பவில்லை. அவர்களின் சடங்குகள், சமய நிகழ்வுகளுக்கு மன்னன் சமுகமளிப்பதை கௌரவமாக அவர்கள் எண்ணினர். பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் பிரதானிகளின் செல்வாக்கினைப் பறிப்பதும் அவர்களின் நோக்கமாக இருந்தது. ஹாஜி மரைக்காயர் எனும் இசுலாமியரை ஊவா மாகாணத்தின் வெல்லச (வெல்லஸ்ஸ) பகுதிக்கு அதிகாரியாக நியமித்தமை, கலகத்திற்கான உடனடிக் காரணமாக அமைந்தது. தலைமைகிளர்ச்சியை அடக்குவதற்கு ஆரம்பத்தில் கெப்பெட்டிப்பொலை திசாவை என்பவரை பிரித்தானியர் அனுப்பியிருந்தாலும், பின்னர் அவர் கிளர்ச்சியாளருக்கு ஆதரவாக மாறி அவர்களுக்குத் தலைமையும் தாங்கினார். இதனால் இன்றும் இலங்கையில் இவர் போற்றப்படுகிறார். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆட்களையும் பொருட்களையும் தருவித்து உள்ளூர் தலைவர்களுக்கு ஆதரவு தந்தார். அஸ்கிரிய பௌத்த பீடத்தின் தலைவர் வண. வாரியப்பொல சுமங்கல தேரோ ஹங்குரான்கெட்டாவுக்குத் தப்பி ஓடினார். 1817 செப்டம்பர் அளவில் மடுகல்லை பசநாயக்க நிலமை, எல்லேபொல அதிகாரம் ஆகிய இரு கிளர்ச்சித் தலைவர்கள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர். பிலிமத்தலாவை கிளர்ச்சியாளர்களுக்குத் தலைமை தாங்கினார். வியாலிவையின் திசாவையாக இருந்த எல்லேப்பொல, மற்றும் ஒருவரை கண்டி போகம்பரை சிறைச்சாலையில் 1818 அக்டோபர் 27 இல் பிரித்தானியர் சிரச்சேதம் செய்தனர்.[2][3][4][5][6] 1818 ஆண்டு கலகப் போக்கு
கலகம் தோல்வியடைந்தமைக்கான காரணிகள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia