2018 ஹுவாலியன் நிலநடுக்கம்![]() ![]() 2018 ம் ஆண்டு, 6 பிப்ரவரி அன்று, இடநேரம் 23:50 மணிக்கு, உந்தத்திறன் ஒப்பளவில் 6.4 ஆக பதிவான நிலநடுக்கம் டாய்வானை தாக்கியது.[1] மெர்காலி தீவிர அளவில் வீஐஐ (மிகவும் தீவிரம்) ஆக பதிவான ஹுவாலியன் கடற்கரை எல்லை தான் அதிக பாதிக்கப்பட்டு, அந்நிலநடுக்கத்தின் நடுவமாக அமைந்தது.[2] குறைந்தபட்சம் 12 இறப்புகளும் 277 க்கும் மேற்பட்ட காயமடைந்தோரும் அறிவிக்கப்பட்டுள்ளது.[3] டாய்வானின் வரலாற்றில் வலிமை வாய்ந்த நிலநடுக்கங்கள் உள்ளன. [4] இத்தீவு, ஃபிலிப்பீன மற்றும் இயூரேசிய கண்டத்தட்டுகளின் நடுவிலான கூட்டுச்சதி மண்டலத்தில் அமைகின்றது. நிலநடுக்கத்தின் இடத்தில், இக்கண்டத்தட்டுகள் ஓராண்டுக்கு 75 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் குறுகிப் போகின்றன. நிலநடுக்கம்எம் 4.6 க்கும் மேற்பட்ட 9 முந்தையநடுக்கங்களைக் கொண்டு அப்பகுதியை பல நாட்களாய் பாத்தித்து, பல நிகழ்வுகளின் வரிசையில் மிகப்பெரிதாக அமைந்தது இந்நிலநடுக்கம். 4 பிப்ரவரி அன்று எம். 4.8 நில அதிர்வுடன் தொடங்கி, அதே நாள் சில கிலோமீட்டர் தொலைதூரத்தில் இன்னொரு எம். 6.1 அதிர்வும் நிகழ்ந்தது.[2] 6 பிப்ரவரி அன்றைய நிலநடுக்கம் சாய்வுச்சீட்டு குழப்பத்தால் நடைபெற்றது.[2] இந்நிலநடுக்கம், 2016 ல், டாய்வானின் டாய்னான் பகுதியில் நிகழ்ந்து, 117 நபர்களை கொன்ற நிலநடுக்கத்தின் இரண்டாம் நூற்றாண்டு அன்றே நடந்தது. [5] இந்நிலநடுக்கத்தை பல மறுநிலவதிர்வுகளால் பின்பற்றியது. இவற்றின் மிகப்பெரிது 7 பிப்ரவரி அன்று, ஹுவாலியன் நகரத்திற்கு 19 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் இடநேரம் 23:21 க்கு நடைபெற்று, வீஐ (வலுவானது) என்ற அதிகபட்ச தீவிரம் அடைந்த எம். 5.7 நிகழ்வாக அமைந்தது.[6] சேதம்![]() ஹுவாலியன் நகரத்தின் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன; இவற்றில் 4 முழுமையாக அழிந்து வீழ்ந்தன. மார்ஷல் தங்கும்விடுதியின் தரைத்தளங்கள் தகர்ந்துப் போனதால், இருவர் உயிரிழந்தனர். தரைத்தளங்களின் அழிவால் தீவிரமாக சரிந்துள்ள யுன் மென் ஸுயீ டீ குடியிருப்பு கட்டிடத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்தும், 8 பிப்ரவரி அன்று, சுமார் 6:30 இடநேர மணி வரை, 7 குடியிருப்பாளர்கள் இன்னும் காணாமல் போயிருக்கின்றனர். இன்னும் கட்டிட சரிவை தவிர்க்க, பாரந்தூக்கிகளால இக்கட்டிடத்தின் ஒரு பக்கத்தில் பெரிய கம்பிகள் வைக்கப்பட்டன.[7] தலைநில சீனாவில் இருந்து வந்த 4 சுற்றுலா பயணிகளைச் சேர்ந்து, 277 பேர் படுகாயமடைந்தனர் எனவும் 12 பேர் உயிரிழந்தனர் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர்.[3] நிலநடுக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட சேதத்தினால், பல பாலங்களும் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன, மற்றும் நீரின்றி பல இல்லங்கள் கிடந்தன.[5] சேதமடைந்த கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற நூற்றுக்கணக்கான தீயணைப்புத்துறையினரும் இராணுவ வீரர்களும் அழிவின் அருகில் இருந்தனர். [8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia