2024 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
2024 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2024 ICC Women's T20 World Cup) மகளிர் இருபது20 உலகக்கிண்ணத்தின் ஒன்பதாவது பதிப்பு ஆகும். இது அக்டோபர் 3 முதல் வங்காளதேசத்தில் நடைபெற இருந்தது. எனினும் அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை அடுத்து, இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதே நாட்களில் நடைபெறுமாறு மாற்றப்பட்டது. பின்னணிபெண்கள் இருபது20 உலகக்கிண்ணமானது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை நடாத்தப்படும் பெண்கள் இருபது20 போட்டிகள் கொண்ட துடுப்பாட்டத் தொடர் ஆகும். இதன் முதலாவது தொடர் 2009இல் இங்கிலாந்தில் நடைபெற்றது.[1] கடைசித் தொடர் 2023இல் தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவைத் தோற்கடித்து ஆத்திரேலியப் பெண்கள் இருபது20 அணி வாகையாளராக உள்ளது.[2][3] நடத்துநர் தேர்வு2022 டிசம்பரில், இந்தத் தொடர் வங்காளதேசத்தில் நடாத்தப்படும் எனப் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அறிவித்தது.[4] 2024 ஆகத்தில், வங்காளதேசம் நடாத்துநர் உரிமையைக் கொண்டிருக்க, போட்டிகள் ஐக்கிர அரபு இராச்சியத்தில் நடைபெறும் எனப் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அறிவித்தது.[5][6] போட்டி வடிவம்இந்தத் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுக் குழுநிலைப் போட்டிகள் நடைபெற்ற பின்னர் ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். நிகழிடங்கள்
அணிகள்
போட்டிகள்குழு A
குழு B
வெளியேறு நிலை
முதலாவது அரையிறுதி
இரண்டாவது அரையிறுதி
இறுதிப் போட்டி
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia