இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்கிறது. [1]1949-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 21 பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்தலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது.[2] சட்டப் பிரிவு 370-இன் கீழ் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள்
வரலாறுஇந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் 1949-இல் இணைக்க சம்மதித்தார். மன்னர் ஹரிசிங்சின் நிபந்தனைகளை நிறைவேற்ற, இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொண்டு, சட்டப் பிரிவு 370-இல் ஜம்மு & காஷ்மீர் பகுதிக்கும் மக்களுக்கும் சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது.[4][5] சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ குறித்த சட்ட முன்வடிவுகள், 2019ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தல் மற்றும் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ-இன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமைகளை நீக்கி 5 ஆகஸ்டு 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையிட்டார்.[6] 5 ஆகஸ்டு 2019 அன்று இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ குறித்து நான்கு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார்.[7] அவைகள்:
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவம் 2019மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 ஆகஸ்டு 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவத்தை மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார். அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ நீக்க வகை செய்யும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, அதிமுக, பிஜு ஜனதா தளம், அகாலி தளம், சிவ சேனா போன்ற அரசியல் கட்சிகளும், எதிராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,விடுதலை சிறுத்தை கட்சி, திமுக, இந்திய தேசிய காங்கிரசு, இந்தியப் பொதுவுடமைக் கட்சி போன்ற கட்சிகள் மாநிலங்களவையில் கருத்துக்கள் கூறினர். முடிவில் அரசின் இத்தீர்மானத்தை மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு விட்டதில், அரசின் தீர்மானத்திற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகள் பெற்று தீர்மானம் நிறைவேறியது.[8] சட்டப்பிரிவு 370ஐ ரத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு2019 சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ இந்திய அரசு நீக்கியது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். 370வது சட்டப்பிரிவை நீக்குவதற்கு எதிராக இருக்கும் மனுதாரர்கள், குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சார்பில் இதுபோன்ற முக்கிய முடிவை இந்திய அரசு எடுக்க முடியாது என்று வாதாடினர். மேலும் இது ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிரான அரசியல் செயல் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை [[ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் (ஒன்றியப் பகுதி) என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக பிரித்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர். இவ்வழக்கு மீது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 11 டிசம்பர் 2023 அன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:[9][10][11][12]:
. இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் படிக்க |
Portal di Ensiklopedia Dunia