குட்டியாரி லால் துவேஷ்
குட்டியாரி லால் துவேஷ் (Gutiyari Lal Duwesh) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். உத்தரப் பிரதேசத்தின் 15, 16 ஆவது சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தார். இவர், ஆக்ரா கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். உத்தரபிரதேசத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் கட்சி உறுப்பினராக இருந்த இவர், 12 மார்ச் 2019 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறி லக்னோவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [1][2][3] ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி1970 ஆம் ஆண்டு இராசத்தான் மாநிலத்தில் பரத்பூரில் உள்ள பர்தாய் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் (ஜாதவ்) சார்ந்தவர். உயர்நிலை பள்ளிக் கல்வி வரையே பயின்றார். அரசியலில் சேரும் முன், ஒரு தொழிலதிபராக இருந்தார்.[1] அரசியல் வாழ்க்கைகுட்டியாரி, பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினராக இரண்டு முறை (2007 & 2012) சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது இரண்டு பதவிக் காலங்களிலும், ஆக்ரா மேற்கு ("பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் ஆணை, 2008"க்கு பிறகு அது இல்லாமல் போனது) மற்றும் ஆக்ரா கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][4] இடுகைகள்
இதையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia