உத்தரப் பிரதேச சட்டமன்றம்
உத்தரப் பிரதேச சட்டமன்றம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் ஈரவை சட்டமன்றமாகும். இது ஆளுநர் மற்றும் மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளையும் கொண்டது. சட்டமன்றத்தின் தலைவராக ஆளுநர் தனது பங்கில் இருப்பதோடு, சட்டமன்றத்தை கூட்ட ஒத்திவைக்க அல்லது சட்டப் பேரவையை கலைக்க முழு அதிகாரம் கொண்டவர். முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் இந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். இலக்னோவில் உள்ள சட்டமன்ற கட்டிடத்தில் ஆண்டுக்கு 3 முறை சட்டமன்றம் கூடுகிறது. அமைப்புஉத்தரப் பிரதேச சட்டமன்றம், சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரண்டு அவைகளைக் கொண்டுள்ளது, அவைகளின் தலைவராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர்உத்தரப் பிரதேச ஆளுநர் சட்டமன்றத்தின் தலைவராக செயல்படுகிறார் மற்றும் மாநிலத்தின் அனைத்து செயலாட்சி, சட்டமன்ற மற்றும் விருப்ப அதிகாரங்களை அனுபவிக்கிறார். இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மத்திய அளவில் இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை மாநில அளவில் கொண்டுள்ளனர். 5 ஆண்டுகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். சட்ட மேலவைசட்ட மேலவை அல்லது மேலவை கலைக்கப்பட முடியாத நிரந்தர அமைப்பாகும். உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டாவது ஆண்டும் ஓய்வு பெறுகிறார்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மாற்றப்படுகிறார்கள். சட்டப் பேரவைசட்டப் பேரவை அல்லது கீழவையில் 403 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வாக்குரிமையின் அடிப்படையில் மாநில குடிமக்களால் நேரடியாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பாலினம், சாதி, சமயம் அல்லது இனம் பாராமல், தகுதி நீக்கம் செய்யப்படாத, 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனும், சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு வாக்களிக்கத் தகுதியுடையவர். இதற்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. சட்டப் பேரவையில் உறுப்பினராகத் தகுதிபெற, ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், மேலும் 25 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், மனநலம் நன்றாக இருக்க வேண்டும், திவாலாகி இருக்கக்கூடாது, குற்றவியல் தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது. சட்டமன்றத்தின் அமர்வுகள்இரு அவைகளும் தங்கள் வேலையைச் செய்யச் சந்திக்கும் காலம் அமர்வு எனப்படும். இரண்டு அமர்வுகளுக்கும் இடையே ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு அவையும் இவ்வளவு இடைவெளியில் கூட்டுவதற்கு ஆளுநருக்கு அஅரசியலமைப்பு அதிகாரம் அளிக்கிறது. எனவே சட்டமன்றம் ஆண்டுக்கு இரண்டு முறையாவது கூட்ட வேண்டும். இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றமும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று அமர்வுகளை நடத்துகிறது:
கூட்டம் நடைபெறும் இடம்மாநிலத்தின் தலைநகரான இலக்னோவில் உள்ள சட்டப் பேரவை பாதையில் அமைந்துள்ள சட்டமன்ற கட்டிடம் சட்டமன்றத்தின் இரு அவைகளின் இருக்கையாகவும் கூடும் இடமாகவும் செயல்படுகிறது. சட்ட மேலவையின் மூன்று கூட்டத்தொடர்களும் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. இந்த கட்டிடத்தை சாமுவேல் ஸ்விண்டன் ஜேக்கப் மற்றும் ஹீரா சிங் வடிவமைத்துள்ளனர்; சிங் கட்டிடத்தின் நீல அச்சுப்படியையும் வரைந்தார். இதையடுத்து கட்டிடம் கட்டுவதை பட்லர் கண்காணித்தார். ₹21 லட்ச (2020 இல் ₹36 கோடி அல்லது 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமம்) (1922 செலவு பணவீக்கத்திற்கு சரிசெய்யப்படவில்லை) செலவில் ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு மற்றும் 21 பிப்ரவரி 1928 அன்று திறக்கப்பட்டது.
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia