சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 20112011 சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்பது இலங்கையில், கொழும்பில் 2011 சனவரி 6 முதல் சனவரி 9 வரை நடைபெற்ற ஒரு பன்னாட்டு தமிழ் எழுத்தாளர் மாநாடு ஆகும். இந்த மாநாட்டை சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்தது. இந்த மாநாட்டின் முதன்மை ஏற்பாட்டாளர் ஆத்திரேலியாவைச் சேர்ந்த லெ. முருகபூபதி ஆவார். காரணங்கள்சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு 12 காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.[1] அவை பின்வருமாறு:
கருப்பொருட்கள்
ஏற்பாடுகள்இடம், திகதி, அரங்குகள்மாநாட்டில் பினவரும் ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
நிதிமுதனை ஏற்பாட்டாளர் லெ. முருகபூபதி, பூபாலசிங்கம் சிறீதரன், தி. ஞானசேரன் ஆகியோர் தொடக்ககட்ட நிதியை வழங்கி உள்ளனர். இலங்கை அரசு, அரசியல்வாதிகளோ தமக்கு எந்தவித நிதி ஆதரவும் செய்யவில்லை என்று ஏற்பாட்டாளர்கள் கூறி உள்ளார்கள். இலவசமாக வழங்கப்பட்ட பகல் உணவு, தேனீர், மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு, பை ஆகியவற்றுக்கென பேராளர்களாகப் பதிவு செய்தவர்களிடம் ஆளுக்கு 1000 இலங்கை ரூபாய்கள் அறவிடப்பட்டது. விமர்சனங்கள்தணிக்கைஇந்த மாநாடு எந்தவித அடிப்படை கருத்து வெளிப்பாட்டுச் சுந்ததிரமும் இல்லாத இலங்கையில் நடைபெறுவதால், எந்தவிதமான அரசியல் அலலது சமூகப் பிரச்சினை விடயங்கள் இங்கு அனுமதிக்கப்படமாட்டது என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். "நிச்சியமாக தணிக்கை இருக்கிறது அதாவது. எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது" என்று மாநாட்டின் முதன்மை ஏற்பாட்டளர்களின் ஒருவர் தி. ஞானசேரன் கூறினார்.[2] ஈழத்து இலக்கியத்தில் கடந்த 30 ஆண்டுகள் நடைபெற்ற "பரிணாம வளர்ச்சி" ஆராய இந்த மாநாடு நடைபெறுகிறது, ஆனால் ஈழத்தில் கடந்த 30 ஆண்டுகள் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலை, ஈழப் போராட்டம் பற்றிய இலக்கியங்கள் இந்த தணிக்கையால் தவிர்க்கப்படும். அரசியல் இல்லாமல் இலக்கியமும் இல்லைபெறுமதிவாய்ந்த இலக்கியங்களில் பெரும்பாலனவை அரசியல் கருத்துக்கள் கொண்டவை. அப்படியிருக்க "அரசியல் விடயங்கள் வரக்கூடாது" என்று தடை போட்டிருப்பது எந்த வகையான இலக்கியங்களை பற்றி இந்த மாநாடு அமைய விருக்கிறது என்று கேள்வியை எழுப்புகிறது. இலங்கை அரசுக்கு துணை போதல், பிரச்சார வாய்ப்புதணிக்கைக்கு உட்பட்டு, அரசின் நேரடி ஆதரவு அற்று நடந்தாலும் இந்த மாநாட்டை இலங்கை அரசு தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. சடங்குகளைக் கொண்ட கோயில் திருவிழாக்கள் போல் அல்லாமல் தமிழர்களின் கருத்து கருவூலாமகக் கருதப்படக் கூடிய எழுத்தாளிர்களின் பொறுப்புக் கூடியது.[3] அரசியல் தீர்வு அல்ல பொருளாதார வளர்ச்சியே தீர்வு என்று கூறும் தற்போதை அரசுக்கு, அரசியல் பிரச்சினைகள் முக்கியம் அல்ல இலக்கியமே முக்கியம் என்ற இந்த மாநாட்டின் கொள்கையும் துணைபோகிறது.[4] "மனித உரிமை மீறல்களும், யுத்த தர்ம மீறல்களும் சிங்கள ராணுவத்தினரால் ஏராளமாக நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பலவும் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச சமூகத்துகே சவால்விடும் சிங்கள இனவாத அநாகரிகத்தினைக் கண்டு உலகின் மாந்த நேயர்களும் அறிவுஜீவிகளும் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள். இத்தகைய அவலச்சூழலிலே, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பிலே மாநாடு கூடுதல் நியாயமானதா? அதுவும் மிக அவசர கதியில்?" என்று எஸ். பொ கேள்வி எழுப்பி உள்ளார்[5]. எழுத்தாளர்களின் எதிர்ப்புஇலங்கை மற்றும் புலம்பெயர் எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள் அமைப்புகள் இந்த மாநாட்டுக்கு கடுமையான எதிர்ப்பைத் பதிவுசெய்து வருகிறன. தேடகம் (கனடா), புதிய திசைகள் (இங்கிலாந்து), மே 18 இயக்கம் (கனடா), இனியொரு (இங்கிலாந்து), அசை (பிரான்ஸ்) உட்பட்ட பல அமைப்புகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மாநாட்டுக்குச் சார்பான கருத்துக்கள்தணிக்கைகள் இல்லாமலிருந்தமைஅரசியல் உண்மைகளைப்பேசுவதற்கு எந்தவிதமான தணிக்கைகளும் இருக்காது என்று தனது நேர்காணலில் தி. ஞானசேகரன் உறுதி மொழி அளித்திருந்ததன்படி[6] மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளிலோ, உரையாடல் நேரத்தில் உரையாடப்பட்ட விடயங்களிலோ எந்தவிதமான மட்டுறுத்தலும் தணிக்கைகளும் செய்யப்பட்டிருக்கவில்லை. ஈழ ஆதரவு தொடக்கம் பல்வேறு அரசியற்பார்வைகள் சுதந்திரமாக வெளிப்படுத்தப்பட வாய்ப்பு வழங்கப்பட்டது. அரசியல் உள்ளடக்கம்மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளிலும் உரையாடல்களிலும் சிறப்பு உரைகளிலும் அரசியல் உள்ளடக்கம் தவிர்க்கப்படாமல் இலங்கை நடப்பு அரசியலின் போக்குக்கள் குறித்த விமர்சனங்களும் கருத்துக்களும் பரவலாக இடம்பெற்றிருந்தன. எழுத்தாளர்களின் ஆதரவுபுலம்பெயர், இலங்கை எழுத்தாளர்கள் கையொப்பமிட்ட ஆதரவு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம், கொழுந்து, மல்லிகை, நீங்களும் எழுதலாம் போன்ற சிற்றிதழ்கள் பலவும் தேசிய நாளிதழ்களான வீரகேசரி, தினக்குரல், சுடரொளி ஆகியனவும் இம்மாநாட்டில் பங்குபற்றியிருந்தன. பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் எம். ஏ. நுஃமான், டொமினிக் ஜீவா, நீ. மரிய சேவியர் அடிகள், பேராசிரியர் செ. யோகராசா பேராசிரியர் மௌனகுரு உட்பட இலங்கைத் தமிழ் சூழலின் மிக முக்கிய ஆளுமைகள் பலர் இம்மாநாட்டில் பங்கெடுத்துள்ளார்கள். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia