தொலைக்காட்சியில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் என்பது 2019 ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காரணமாக தொலைக்காட்சித் துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது ஆகும். இது அனைத்து கலைத் துறைகளிலும் அதன் தாக்கங்களை ஏட்படுத்தியது. இதன் விளைவாக பல நாடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்தபட்டு வருவாய் (உரிமைகள் மற்றும் விளம்பர விற்பனை மூலம்) மற்றும் வேலைவாய்ப்புகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துதியது.
இது சமூக விலகல், ஊரடங்கு சட்டம் மற்றும் வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவின்படி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைவரின் பாதுகாப்பையும் மனதில் கருதி இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் விளைவாக உலகளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குறைந்தது 60% நிறுத்தப்பட்டு குறைந்தபட்சம் பாதி நிரல் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது.
மே 2020 நடுப்பகுதியில் (21 மே 2020) அதிகபட்சமாக 20 நடிகர்களை கொண்ட தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பைத் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.[4][5][6] படப்பிடிப்பு நடைமுறைகளின் போது கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பராமரிக்க எச்சரிக்கையும் செய்யப்பட்டது..[7][8][9]
25 மே 2020 நிலவரப்படி தொலைக்காட்சி நாடகத் தொடர்களின் படப்பிடிப்பு தொடங்கியது, ஆனால் தமிழ்நாடு அரசாங்கம் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் விதித்தது, இதன் விளைவாக தொலைக்காட்சி தயாரிப்புகள் மீண்டும் நிறுத்தப்பட்டன. இருப்பினும் 7 ஜூலை 2020 அன்று அனைத்து புதிய அத்தியாயங்களையும் ஒளிபரப்ப தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.