அரண்மனை கிளி (தொலைக்காட்சித் தொடர்)
அரண்மனை கிளி என்பது விஜய் தொலைக்காட்சியில் 24 செப்டம்பர் 2018 முதல் 27 மார்ச்சு 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடரை அணில் இயக்க, புதுமுக நடிகை மோனிஷா ஜானுவாகவும், அர்ஜுனாக புதுமுக நடிகர் சூர்யா தர்ஷன் மற்றும் மீனாட்சியாக நடிகை பிரகதியும் வில்லியாக துர்கா கதாபாத்திரத்தில் நடிகை நீலிமா ராணியும் நடித்துள்ளனர்.[1][2] இந்தத் தொடர் கொரோனாவைரசு காரணத்தால் 27 மார்ச்சு 2020 முதல் 390 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம்மாற்றுத்திறனாளியான அர்ஜுனுக்கும் மற்றும் அவன் தாய் மீனாட்சிக்கும் ஜானுவை சுத்தமாகப் பிடிக்காத நிலையில், சர்ந்தர்ப்ப சூழ்நிலையால் அருஜுனை திருமணம் செய்யும் ஜானு, அந்த வீட்டுக்கு வாழ வருகிறாள். எல்லோருடைய வெறுப்புகளையும் மீறி, அந்த வீட்டிலுள்ளவர்களின் மனதில் ஜானு இடம்பிடிப்பாளா? என்பதுதான் இந்தத் தொடரின் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
ஜானு குடும்பத்தினர்
அர்ஜுனின் குடும்பத்தினர்
நேரம் மாற்றம்விஜய் தொலைக்காட்சியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, பின்னர் 30 டிசம்பர் 2019 முதல் இரவு 9:45 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் 27 மார்ச்சு 2020 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மறு ஆக்கம்
மொழி மாற்றம்இந்த தொடர் தெலுங்கு மொழியில் 'மஹல்லா கோகிலா' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மா தொலைக்காட்சியில் டிசம்பர் 15 முதல் ஒளிபரப்பாகிறது . சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia