பில்லூர் வீரட்டேஸ்வரர் கோயில்
பில்லூர் வீரட்டேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் பில்லூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இக்கோயில் பஞ்ச இந்திரிய தலங்களில் ஒன்றாகும். [2] இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும். இவ்வூர் திருச்செங்கோடு - பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் உள்ளது. தல வரலாறுதிருமணிமுத்தாறு ஆற்றின் கரையில் இந்த ஐந்து கோயில்கள் உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது காட்டிலுள்ள புருசா மிருதத்தினை அழைத்துவந்தால் பஞ்சம் தீருமென அசிரிரி கேட்டது. அதன்படி புருசா மிருகத்தை பிடிக்கச் சென்ற போது மணிமுத்தாறு நதிகரையில் பீமன் வழிபட்ட தலங்கள் பஞ்ச இந்திரிய தலங்கள் எனப்படுகின்றன. [3]இக்கோயில் பஞ்ச இந்திரிய தலங்களில் மூக்கிற்கு உரிய தலமாக கருதப்படுகிறது. சந்நிதிகள்
விழாக்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia