வல்லவரையன் வந்தியத்தேவன்
வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டு மன்னர் ஆவார். முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் இராசேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர்.[1] முதலாம் இராசராசனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார். அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில் (தற்போது வேலூர்) பிரமதேசம் எனும் பகுதியினை அரசாண்டவர்.[2] சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதி வல்லவரையர் நாடு என வழங்கப்பட்டது.[3] மற்ற குறுநிலமன்னர்களை சிறைப் பிடித்து, மன்னர்களின் பொருள்களை புலவர்களுக்கு பரிசு அளித்து வந்தனர்.[4] இவரின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதி வல்லவரையர் நாடு என்றழைக்கப்பட்டது. வந்தியத்தேவனைப் பல்வேறு வரலாற்றுப் புதின ஆசிரியர்கள் பலமிக்க சேனைத்தலைவானகவே தம் புதினங்களில் விவரித்துள்ளனர். தோற்றம்வந்திய தேவனின் தோற்றம் குறித்து பல்வேறு விவாதங்கள் இருப்பினும் பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி. கிருஷ்ணமூர்த்தி வந்தியத் தேவனை வாணர் குலத்தைச் சார்ந்த வீரன் எனவும், இவர்கள் வாணர் பேரரசு மகதை மண்டலத்தைச் சார்ந்தவர்கள் எனவும் தன் நாவல் பொன்னியின் செல்வனில் குறிப்பிடுகிறார். ஆதாரங்கள்இராசராசனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராசராசன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான். வந்தியத் தேவனது பெயர் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது, அவர் முதலாம் இராசராசனின் சகோதரி குந்தவையின் கணவர் என்று குறிப்படப்பட்டுளது. ![]() இதர நூல்கள்வந்தியத்தேவனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்http://www.goodreads.com/book/show/18368541-nandhipurathu-nayagi
|
Portal di Ensiklopedia Dunia