வில்லிவாக்கம் தொடருந்து நிலையம்
வரலாறு![]() ![]() 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி சென்னை மத்திய தொடருந்து நிலையம்-திருவள்ளூர் தொடருந்து நிலையப் பிரிவின் மின்சாரமயப்படுத்தலுடன் இந்த நிலையத்தின் முதல் தடம் மின்சாரமயமாக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி வில்லிவாக்கம் தொடருந்து நிலையம்-ஆவடி தொடருந்து நிலையப் பிரிவின் மின்சாரமயப்படுத்தலுடன் இந்த நிலையத்தின் எஞ்சிய தடங்கள் மின்சாரமயமாக்கப்பட்டன.[1] வசதிகள்வில்லிவாக்கம் தொடருந்து நிலையத்தில் பாதசாரிகளுக்கான நடை மேம்பாலம், சமதள நிலை கடப்பு மற்றும் வாகன சுரங்கப்பாதை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன சுரங்கப்பாதையின் கட்டுமானம் 4 டிசம்பர் 2007 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.[3] முந்தைய சமதள நிலை கடப்பு இரண்டிற்குப் பதிலாக[4]2012 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 அன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இவ்வசதி நிலையத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 900 அனுமதிச் சீட்டுகள் இங்கு வழங்கப்படுகின்றன. இதில் 400 பயணிகள் வடக்குப் பகுதியிலிருந்து வருகின்றனர். 2002 ஆம் ஆண்டில், வடக்குப் பகுதியில் ஒரு பயணச்சீட்டு வழங்கும் முனையம் திறக்கப்பட்டது. இருப்பினும், குறைவான பயன்படுத்தல் காரணமாக 2005 ஆம் ஆண்டு மூடப்பட்டது.[5] மக்கள் தொகைஅருகிலுள்ள கொளத்தூர் பகுதியில் 54 காலனிகளில் 500,000 மக்கள் வசிக்கின்றனர். சென்னை புறநகர் இரயில்களின் சேவையை தினசரி 25,000 பேர் பயன்படுத்துகின்றனர். 2013 ஆம் ஆண்டின் போதே, இந்த நிலையம் ஒரு நாளைக்கு 32,000 பயணிகளை கையாண்டது.[2] மேலும் பார்க்க
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia