அசாமிய காட்டு மல்லி
அசாமிய காட்டு மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum nervosum) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[2], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[3] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இந்த தாவர இனம் யாசுமினம் நெர்வோசம் என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. 1790 ஆம் ஆண்டு இவ்வினத்தினைப் பற்றிய தாவரவியல் முதற்குறிப்பு உள்ளது. வாழிடம்அசாம், வங்காளதேசம், கம்போடியா, சீனா (China South-Central, China Southeast), கிழக்கு இமயமலை, ஆய்னான், லாவோஸ், மலாயா, மியான்மர், தைவான், தாய்லாந்து, திபெத்து, வியட்நாம் ஆகிய நாடுகள், இத்தாவரத்தின் தாயகமாகக் கருதப்படுகிறது. ஒகசவரா தீவுக்கூட்டத்தில் (Ogasawara-shoto), இத்தாவரம் உலகின் பிற இடத்திலிருந்து அறிமுகத் தாவரமாக இருக்கிறது.[4] வேறு பெயர்கள்
பேரினச்சொல்லின் தோற்றம்அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும்.[6] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.[7] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
வெளியிணைப்புகள்![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
|
Portal di Ensiklopedia Dunia