ஆகாஷ் விஜய்வர்கியா
ஆகாஷ் விஜய்வர்கியா (Akash Vijayvargiya) மத்தியப் பிரதேசத்தின் இந்தோரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார்.[2] 2018 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், ஆகாஷ் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும், 3 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவருமான அஷ்வின் ஜோஷியை 5700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது முதல் தேர்தலில் வெற்றியைப் பெற்றார்.[3] இவர் 'தேவ் சே மகாதேவ்' என்ற ஆன்மீக ஊக்க புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் ராம்தேவ் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மூத்த மகன் ஆவார்.[4] சர்ச்சைகள்26 ஜூன் 2019 அன்று, அரசு ஊழியர் ஒருவரை துடுப்பாட்ட மட்டையால் அடித்ததற்காக இவர் செய்திகளில் இடம் பெற்றார். இது இவரது சொந்த அரசியல் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது.[5] காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, இவர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia