இரமாகாந்த் யாதவ்
இரமாகாந்த் யாதவ் (Ramakant Yadav ; பிறப்பு சூலை 1,1957) என்பவர் சமாஜ்வாதி கட்சியினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பூல்பூர் பவாயை சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் ஆசம்கர் மக்களவைத் தொகுதியின் மேனாள் மக்களவை உறுப்பினர் ஆவார்.[1] அரசியல் வாழ்க்கைஇரமாகாந்த் யாதவ் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2008-ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[2] சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நாடாளுமன்றத் தேர்தலில் இரமாகாந்த் யாதவுக்கு எதிராகப் போட்டியிட்டு மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது அனைத்து அரசியல் பகுப்பாய்வாளர்களுக்கும் சவாலானதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. "பின்தங்கிய இரட்சகர்" என்ற உருவத்தை இவர் கொண்டிருப்பதால் மக்களுடனான இவரது சிறந்த பிணைப்பு இதற்குக் காரணம். இவருக்கு முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி மக்களவை உறுப்பினராக இருந்த உமகாந்த் யாதவ் இவரது சகோதரர் ஆவார். இவரது மகன்களில் ஒருவரான அருண் குமார் யாதவ் உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள பூல்பூர் பவாயை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2019ஆம் ஆண்டில் இவர் காங்கிரசு கட்சி சார்பில் பாதோகி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவமானகரமான தோல்வியை எதிர்கொண்டார். இவருக்கு 25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பின்னர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் பூல்பூர் பவாயை சட்டமன்றத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பதவிகள் வகித்தவர்
வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia