இராமகிருஷ்ண ஆணை![]() இராமகிருஷ்ணரின் ஆணை ( Ramakrishna Order) என்பது இராமகிருட்டிணரால் நிறுவப்பட்ட துறவற பரம்பரையாகும். இராமகிருட்டிண மடத்தில் ஆண் சந்நியாசிகள் மற்றும் பிரம்மச்சாரிகள் உள்ளனர். 1886 சனவரியில் கோசிபூர் மாளிகையில் அவர் தனது நெருங்கிய சீடர்களில் பன்னிரண்டு பேருக்கு துறவரத்தை வழங்கினார். [1] [2] 1886 ஆம் ஆண்டில் இராமகிருஷ்ணர் காலமான பிறகு விவேகானந்தர் தலைமையில் இளம் சீடர்கள் ஒரு புதிய துறவற ஒழுங்காக ஒழுங்கமைத்தனர். இராமகிருஷ்ண ஆணையை, இளம் துறவிகளுக்குப் பயிற்சி அளிக்கும் சட்டப்பூர்வ நிறுவனமான இராமகிருட்டிண மடத்துடன் இதை குழப்பிக் கொள்ளக் கூடாது. அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள், ஆரம்பப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் - அத்துடன் கிராமங்களில் பேரிடர் நிவாரணம் மற்றும் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட தொண்டுப் பணிகளைச் செய்யும் இராமகிருசுண இயக்கம் என்ற இணையான அமைப்பும் உள்ளது. [2] தகவல்இது இராமகிருட்டிண மடம் மற்றும் இராமகிருசுண இயக்கம் ஆகிய இரட்டை அமைப்புகளை உருவாக்கியது. இவை இரண்டும் இந்தியாவின் [[கொல்கத்தா]விற்கு அருகிலுள்ள பேலூர் மடத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளன. வங்காளத் துறவியான இராமகிருஷ்ணரால் இந்த அமைப்புகள் ஈர்க்கப்பட்டன. [3] இராமகிருஷ்ணர் 1836 [4] ஆண்டு பிறந்தார். அவர் தனது இளம் சீடர்களை விவேகானந்தரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு இராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். இராமகிருஷ்ணர் காலமான பிறகு விவேகானந்தர் தலைமையில் இளம் சீடர்கள் ஒரு புதிய துறவற ஒழுங்காக ஒழுங்கமைத்தனர். இராமகிருஷ்ணா இயக்கம் "மனிதனில் கடவுளை வழிபடுதல்" என்ற நடைமுறையை செயல்படுத்த இணையான அமைப்பாக அமைக்கப்பட்டது. [2] இந்தியத் துணைக்கண்டம், ஐரோப்பா, உருசியா, ஜப்பான், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த இயக்கத்துடன் தொடர்புடைய 166 மையங்கள் உள்ளன. இராமகிருஷ்ண இயக்கம் பஞ்சம், தொற்றுநோய், தீ, வெள்ளம், பூகம்பம், சூறாவளி மற்றும் வகுப்புவாத மோதல்களால் பாத்திக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்க முயற்சிக்கிறது. [3] முத்திரைஇராமகிருஷ்ண ஆணையின் முத்திரையில் கடவுளுக்கான நான்கு பாதைகளுக்கான அவர்களின் யோசனையை சித்தரிக்கும் சில சின்னங்கள் உள்ளன. தன்னலமற்ற வேலை என்று பொருள்படும் அலை அலையான நீரையும், தாமரை என்றால் கடவுளின் அன்பையும், உதய சூரியன் என்றால் அறிவையும், சூழ்ந்த பாம்பு என்பது ஆன்மீக சக்திகளின் விழிப்புணர்வையும் உள்ளடக்கியது. [3] இதனையும் பார்க்கவும்
சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia