இலங்கை இனக்கலவரங்கள்
இக்கட்டுரை இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களைப் பட்டியல் படுத்துகிறது. 1915 கலவரம்இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது.[1][1][2][3]7[4][5] 1958 கலவரம்58 கலவரம் என அறியப்பட்ட இக்கலவரம் சிங்கள் தமிழ் இனத்தவரிடையே பொலனறுவை கொழும்புப் பகுதிகளில் ஏற்பட்டது.[6] 1977 கலவரம்1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களை இலக்கு வைத்து, இக்கலவரம் நடத்தப்பட்டது.[2][7] 1983 கலவரம்![]() கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது.[3] 2000 கலவரங்கள்பிந்துனுவெவை கலவரம்பிந்துனுவெவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 தமிழ் கைதிகள் கிரமாத்தவர்களாலும் இராணுவத்தினராலும் கொலை செய்யப்பட்டனர்.[4] தலவாக்கலை-கொட்டகலை-அட்டன்-கினிகத்தனைபிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப்பட்ட தலவாக்கலை,வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. தலவாக்கலை, கொட்டகலை, அட்டன், கினிகத்தனை நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன.[5][6][7][8][9][10][11] 2001 மாவனல்லை கலவரம்2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரிலும் அதற்கு அண்மையில் இருந்தப் பகுதிகளிலும் இருந்த இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்டக் கலவரமாகும்.[12][13] 2006 கலவரங்கள்2006 இன் மத்தியில் , ஒரு குண்டு வெடிப்பு 16 பேரை கொன்றது. தமிழருக்குச் சொந்தமான கடைகள் மற்றும் தமிழ் பொது மக்களை ஒரு சிங்களக் கும்பல் வேட்டையாடியது.ஒரு முக்கிய மருத்துவமனையின் தகவலின் படி, குண்டு வெடிப்யில் 16 பேர், எட்டு தமிழர்கள், ஐந்து சிங்களம், இரண்டு முஸ்லிம் மற்றும் அடையாளம் முடியாத ஒருவர் கொல்லப்பட்டனர். காவல்துறை மற்றும் இராணுவத்தின் முழு படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனினும் கலவரம் தன்னிச்சையானதா அல்லது திட்டமிட்டதா என்பதை தெரிந்து கொள்ளவோ அல்லது அவர்களை தடுத்து நிறுத்தவோ இயலவில்லை.[14][15] 17 அக்டோபர் 2006 தமிழருக்குச் சொந்தமான கடைகள் பல சேதமாகின மற்றும் புலிகளின் குழு ஒரு கடற்படை தளம் மீதான தாக்குதலில் மூலம் துறைமுக நகரில் தமிழ் வியாபாரிகளுக்கு எதிரான கும்பல் வன்முறை அழிக்கப்பட்டது. இதில் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை.[16][17] 2018 சிங்கள முசுலிம் இனக்கலவரம்2018 மார்ச் மாதத்தில் இடம்பெற்ற இக்கலவரம் தனிப்பட்ட நான்கு பேரின் குடி வெறியினால் ஏற்பட்டது. மேலும் பார்க்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia