ஐ. எஸ். இராமச்சந்திரன்ஐ. எஸ். ஆர் (ISR) என்று தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்பட்ட ஐ. எஸ். இராமச்சந்திரன் (நவம்பர் 7, 1936), ஒரு தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக நடிகர். கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஐ.எஸ்.ஆர். தியேட்டர்ஸ் (ISR Theaters) என்ற நாடக நிறுவனத்தை நிறுவி, சொந்தமாக பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். சென்னை தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.[1] கர்நாடக இசை ஞானமுள்ள ஐ.எஸ்.ஆர், ஓரிரு திரைப்படங்களில் பாடியுமிருக்கிறார்; ஆடியோ ஆல்பம் வெளியிட்டுள்ளார். அரசியல் மற்றும் சமூகத்தை நையாண்டி செய்து அவரே எழுதி, அவரே பாடிய எல்.பி இசைத் தட்டு ஒன்றை எச்.எம்.வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாழ்க்கைச் சுருக்கம்பூர்வீகம் இராஜபாளையத்தை அடுத்து உள்ள சொக்கநாதன் புத்தூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். அவருடைய தந்தையின் பெயர் சர்க்கரை நாடார். அவருடைய இளைய சகோதரரின் பெயர் சோலை என்று அழைக்கப்பட்ட சோலையப்பன். அவரும் நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். குடும்பம் மனைவியின் பெயர் பொன்னுத்தாய். அவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். மூத்த மகன் செல்வகுமார், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரிகின்றார். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் (ISR Ventures) என்கிற திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஐ.எஸ்.ஆர் கே. பாலாஜி அவர்களின் நிறுவன நடிகராக இருந்தார். கே. பாலசந்தர்அவரின் பல திரைப்படங்கில் நடித்துள்ளார்.[2] ஐ.எஸ்.ஆர் மேல்படிப்புக்காக சென்னை வந்து பாலிடெக்னிக் படித்துவிட்டு, தென்னக இரயில்வேயில் பணியில் அமர்ந்தார். பணியில் இருந்து கொண்டே, ஓய்வு நேரங்களில் நாடகம், திரைப்படங்களில் நடித்து வந்தார். கும்பகோணத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே, நெஞ்சு வலி தாக்கி ஒரு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் நடித்த அந்த கடைசித் திரைப்படம் மோகமுள்.[2] நடித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia