கண்ணனூர் ஊராட்சி (திருச்சிராப்பள்ளி)
அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அமைவிடம்கொல்லிமலையில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் அய்யாற்றின் கிழக்கு கரையில் கண்ணனூர் அமைந்துள்ளது. திருச்சி மாவட்ட எல்லைப்பரப்பின் வடக்கு பகுதியில், திருச்சியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் துறையூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் மாநில நெடுஞ்சாலை எண் 161 இல் உள்ளது. வரலாறுவள்ளுவப்பாடி நாடு என்பது கண்ணனூர் என்னும் ஊரை மையமாகக் கொண்ட நாட்டுப்பகுதி எனத் தெரியவருகிறது. இப்பகுதியில் இக்காலத்திலும் வள்ளுவன் குடியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர். இந்த வள்ளுவப்பாடி நாடுதான் புகழேந்திப் புலவரைப் போற்றிப் பேணிய சந்திரன் சுவர்க்கியின் மள்ளுவநாடு எனச் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவதாக மு. அருணாசலம் தெரிவிக்கிறார்.[7] பொருளாதாரம்வேளாண்மைத் தொழில் இங்கு முதன்மையாக திகழ்கிறது. அய்யாற்றின் நீர் வளம் இங்கு ஆதாரமாக உள்ளது. நெசவுத்தொழில், மண்பாண்டத்தொழில், புட்டுத்தொழில் (பிட்டு) முதலான தொழில்களும் இங்குள்ள மக்கள் செய்து வருகின்றனர் . சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:
கல்வி நிறுவனங்கள்கல்லூரிகள்இமயம் கல்வி நிறுவனங்களின் சார்பில் கலை அறிவியல் கல்லூரி ,பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி , பல்தொழில் நுட்பக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள்
நூல் நிலையம்1. கிராமப்புற நூலகம் வங்கிகள்1. கரூர் வைசியா வங்கி] 2.இந்தியன் ஓவர்ஸ்சீசு வங்கி 3.அஞ்சல் நிலையம் 4.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் மருத்துவமனை1.அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 2.அரசு கால்நடை மருத்துவமனை கோவில்கள்![]() 1.செல்லாண்டியம்மன் கோவில் 2.அங்காளம்மன் கோவில் 3.மகாலட்சுமி அம்மன் கோவில் 4.பகவதி அம்மன் கோவில் 5.ஆகாச கருப்புசாமி கோவில் 6.முருகன் கோவில் 7.பாப்பாத்தி அம்மன் கோவில் வாரச்சந்தைஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று வாரச்சந்தை கண்ணணூரில் கூடுகிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமமக்கள் இச்சந்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia