காஞ்சிக்கோயில்
காஞ்சிக்கோயில் (ஆங்கிலம்:Kanjikoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் உள்ள முத்துக்கவுண்டம்பாளையத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இக்குளம் மூலம் நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம் மற்றும் 4 கிராம ஊராட்சிகளுக்கு, 'கூட்டுக்குடிநீர் திட்டம்' மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது. அமைவிடம்காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு கிழக்கில் 18 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் கவுந்தப்பாடி 8 கி.மீ.; வடக்கில் பவானி 15 கி.மீ.; தெற்கில் பெருந்துறை 8 கி.மீ. தொலைவில் உள்ளன. பேரூராட்சியின் அமைப்பு20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 39 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,468 வீடுகளும், 11,294 மக்கள்தொகையும் கொண்டது. [4] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia