கீய் பன்யோர் மாவட்டம்
கீய் பன்யோர் மாவட்டம் (Keyi Panyor district) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தின் 28 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] யாசுலி இதன் தலைமையகமாகும்.[3] வரலாறுதிசம்பர் 2022-இல், அனைத்து யாசுலி மாணவர் சங்கம், சுபன்சிரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, கீய் பன்யோர் மாவட்டத்தை உருவாக்கக் கோரியது.[4] செப்டம்பர் 2023-இல், அருணாசலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதாக அறிவித்தார்.[5] 2024 பிப்ரவரியில், மாவட்ட உருவாக்கத்திற்கான சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது கீழ் சுபன்சிரி மாவட்டத்திலிருந்து 195 கிராமங்களைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[6] மார்ச் 1,2024-இல், இந்த மாவட்டம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. [7] மக்கள்தொகைகீய் பன்யோர் மாவட்டம் மாவட்டத்தில் முக்கியமாக நைசி மக்கள் வசிக்கின்றனர். இதன் மக்கள்தொகை 30,000க்கும் அதிகமாக உள்ளது. இது 195 கிராமங்களை உள்ளடக்கியது.[8] அரசியல்அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையில் யாசுலி சட்டமன்றத் தொகுதி இந்த மாவட்டத்தில் உள்ளது.[9] இந்த மாவட்டம் அருணாச்சல மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia