குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம்
குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் (Gundla Brahmeswaram Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இச்சரணாலயத்தின் வடக்கு பகுதி நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். வரலாறுகுண்டலா பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் செப்டம்பர் 18, 1990 அன்று வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[1] குண்டலா பிரம்மேசுவரம் பீடபூமியிலிருந்து இந்த சரணாலயம் இதன் பெயரைப் பெற்றது.[2] விளக்கம்குண்டலா பிரம்மேசுவரம் வனவிலங்கு சரணாலயம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும்.[3] இது மந்திராலம்மா கனும மற்றும் நந்திகனுமா மலைப்பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளது.[1] இந்த சரணாலயம் 1,194 km2 (461.0 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது.[3] இந்த காட்டுயிர் காப்பகத்தின் வடக்குப் பகுதியில் நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகத்தின் முக்கிய பகுதியாக உள்ளது.[1] இந்த சரணாலயத்தின் வழியாக குண்டலகம்மா ஆறு ஓடுகிறது.[1] தாவரங்களும் விலங்கினங்களும்அருகிய பத்து சிற்றினங்கள் உட்பட 353 வகையான தாவரங்கள் இங்குக் காணப்படுகின்றன.[1] குண்டலா பிரம்மேசுவரா சரணாலயத்தில் உள்ள பாலூட்டிகளில் குரங்குகள், சிறுத்தைகள், புலிகள், எலிகள், துரும்பன் பூனைகள், இந்திய பறக்கும் அணில், குதிரை இலாட வௌவால், சருகுமான், எறும்புத்தின்னி, கடமான், நீலான் மற்றும் குல்லாய் குரங்கு ஆகியவை அடங்கும்.<[1][2] 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், சரணாலயத்தில் 23 புலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் 17 பெண் புலிகள், ஐந்து ஆண் புலிகள் மற்றும் குட்டி புலி ஒன்று அடங்கும்.[3] அச்சுறுத்தல்கள்குண்டலா பிரம்மேசுவரம் வனவிலங்கு காப்பகத்தில் உள்ள உள்நாட்டுப் பல்லுயிர் வளம் ஆக்கிரமிப்பு தாவர வகைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia