நந்தியால் மாவட்டம்
நந்தியால் மாவட்டம் (Nandyal district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் நந்தியால் நகரம் ஆகும். இம்மாவட்டம் கர்நூல் மாவட்டத்தின் நந்தியால் வருவாய் கோட்டம், துரோணாச்சலம் எனும் தோனே வருவாய் கோட்டம் மற்றும் அத்மக்கூர் வருவாய் கோட்டங்களின் பகுதிகளை கொண்டு 5 ஏப்ரல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2][3][4][5][6] 9,681 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 17.82 இலட்சம் ஆகும். மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் 3 வருவாய்க் கோட்டங்களாகவும், 29 மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நந்தியால், நந்திகோட்குர், அள்ளகட்ட்டா, ஆத்மக்கூர் என 4 நகராட்சிகளும், 457 கிராம ஊராட்சிகளும், பெத்தம்செர்லா எனும் பேரூராட்சியும் கொண்டது. மண்டல்கள்
அரசியல்நந்தியால் மாவட்டம் நந்தியால் மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. அவைகள்:
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia