குவாசுலு-நதால் (KwaZulu-Natal,/kwɑːˌzuːluːnəˈtɑːl/) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது கேஇசட்என்(KZN) என்றும் நதால் என்றும் குறிப்பிடப்படுகின்றது. "பூங்கா மாகாணம்" எனவும் அறியப்படுகின்றது.[4]) 1994இல் மாகாணங்கள் சீரமைக்கப்பட்டபோது சூலுபந்துசுத்தானாகிய குவாசுலுவும் (சூலு மொழியில் "சூலுக்களின் இடம்") நதாலும் இணைக்கப்பட்டு இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது. இது நாட்டின் தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடலின் கடலோரமாக அமைந்துள்ளது; மூன்று மாகாணங்களுடனும் மொசாம்பிக், சுவாசிலாந்து, லெசோத்தோ நாடுகளுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரமாக பீட்டர்மாரிட்சுபர்கும் மிகப் பெரும் நகரமாக டர்பனும் உள்ளன.
தற்போதைய மாகாணத்தின் வடபகுதியில் 1830களிலும் 1840களிலும் சூலு இராச்சியமும் தென்பகுதியில் போயர்களின் நதாலியா குடியரசும் அமைந்திருந்தன. 1843இல் பிரித்தானியர்கள் நதாலியா குடியரசை கைப்பற்றி நதால் குடியேற்றம் அமைத்தனர். குவாசுலு 1979 வரை தன்னாட்சியுடன் இருந்தது.
தென்னாப்பிரிக்காவின் வரலாற்றில் பல குறிப்பிடத்தக்க நபர்கள் இங்கு பிறந்துள்ளனர்: