கூவம் திரிபுராந்தகர் கோயில்
கூவம் திரிபுராந்தகர் கோயில் (Tripuranthaka Swamy Temple) என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1] இறைவன், இறைவிஇச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி. சிறப்புகள்இக்கோயிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். இந்த லிங்கம் மணலால் ஆனது என்கின்றனர். இவருக்கு பூசை செய்யும்போது கோயில் அச்சகர்கூட இவரைத் தொடுவது. இல்லை. மூலவரை தொடாமலே அனைத்து பூசைகளும் செய்யப்படுகின்றன. மனித கரம் படாத திருமேனி என்பதால் இவரது திருமேனியை தீண்டாத் திருமேனி என அழைக்கின்றனர். கோயிலுக்கு வடக்கே தொலைவில் உள்ள திருமஞ்சன மேடையில் இருந்து கூவம் ஆற்று நீரைக் கொண்டுவந்தே இறைவனுக்கு அபிசேகம் செய்யப்படுகிறது. தவறி வேறு நீரால் அபிசேகம் செய்தால் இறைவன் மீது எறும்பு மொய்த்துவிடுகிறது என்கின்றனர்.[2] பெயர் விளக்கம்திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது.[3] திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). அமைவிடம்இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூவம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் வழியாக திருவள்ளூர் பாதையில் கூவம் பிரிவு சாலையில் அமைந்துள்ளது. படத்தொகுப்பு
இவற்றையும் பார்க்கஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்
|
Portal di Ensiklopedia Dunia