கே.மணிகண்டன் (K. Manikandan) ஓர் இந்திய திரைப்பட எழுத்தாளரும், நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றுகிறார் .
தொழில்
மணிகண்டன் ஒரு பிரபலமான உண்மைநிலை நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார் . பின்னர், இவர் ஒரு பண்பலை வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகச் சேர்ந்தார். அதே நேரத்தில் பல படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பின்னணி பேசி வந்தார்.[1]
இவர் பீட்சா II: வில்லா (2013) என்ற படத்துடன் எழுத்தாளராக அறிமுகமானார்.[2]இந்தியா பாகிஸ்தான் (2015) படத்தில் நடிகராக அறிமுகமான இவர், நலன் குமரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் (2016) படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.[1]எம். எசு. பாசுகர், லல்லு ஆகியோர் நடிப்பில் ஸ்ரீ கணேஷ் என்ற இயக்குனரின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்த 8 தோட்டாக்கள் (2017) படத்தில் மணிகண்டன் ஒரு வில்லனாக நடித்தார்.[3] புஷ்கர்-காயத்ரியின் மூன்றாவது இயக்கமான விக்ரம் வேதா (2017) படத்திற்கான வசனங்களை எழுதினார். மேலும் இப்படத்தில் ஒரு காவலர் வேடத்திலும் நடித்தார். 2018 இல், பா. ரஞ்சித் தனது காலா (2018) படத்தில் ஒரு வேடத்தை இவருக்கு அளித்தார்.[1][4][5] இவர், இயக்குநர் சிவாவின்விஸ்வாசம், ஜீது ஜோசப் இயக்கிய தம்பி (2019) ஆகிய படத்தில் உரையாடல் எழுத்தாளராக இருந்தார்.[4][6][7] ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி (2019) என்ற காதல் படத்தில் நிவேதிதா சதீஷுடன் இணைந்து நடித்தார்.[8][9]ஏலே (2021) படத்தில் நடித்ததற்காக மணிகண்டன் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.
டெல்லி கணேஷும் இவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 'நாரை எழுதும் சுயசரிதம்' (ஆங்கில தலைப்பு: Endless) என்ற சுயாதீன திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார்.[10][11] 'இந்திய சினிமா போட்டி'யின் கீழ் பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் (2016) பங்கேற்க இது தேர்வு செய்யப்பட்டது.[12][13][14] 16 வது நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (2016) திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு படங்களில் இதுவும் ஒன்றாகும்.[15][16][17]