சதாசிவம், தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவன் வடிவமாகும்.[1] தூயவெண்ணிறத்துடன், ஐந்து திருமுகங்களும், பத்துக் கரங்களும், பதினைந்து திருக்கண்களும் கொண்டு, பதினாறு வயது இளைஞனாகக் காட்சியருளும் சதாசிவனைத் தியானிக்குமாறு, ஆகமங்கள் கூறுகின்றன.
ஐந்தொழிலை ஆற்றுகின்ற பரம்பொருளின் அதியுச்ச வடிவமாகக் கருதப்படும், சதாசிவமே, ஈசனின் திருப்பெருவடிவமாகக் கருதப்படுகின்றார். இம்மூர்த்தி, தன் ஐந்து திருமுகங்கள் மூலமே ஐந்தொழிலை நிகழ்த்துவதாக ஆகமநூல்கள் கூறுகின்றன. அவற்றின் சுருக்கம் வருமாறு: