சபர்மதி விரைவு வண்டி

அகமதாபாத்-வாரணாசி எக்ஸ்பிரஸ்
கண்ணோட்டம்
வகைவிரைவுத் தொடர் வண்டி
முதல் சேவைகுஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம்
நடத்துனர்(கள்)மேற்கு இரயில்வே
வழி
தொடக்கம்அகமதாபாத் (ADI)
இடைநிறுத்தங்கள்50
முடிவுவாரணாசி (BCY)
ஓடும் தூரம்1,592 km (989 mi)
சராசரி பயண நேரம்34 மணி 35 நிமிடம்
சேவைகளின் காலஅளவுவாரத்தில் 4 நாட்கள்
தொடருந்தின் இலக்கம்19167 / 19168
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)AC 1 அடுக்கு, AC 2 அடுக்கு, AC 3 அடுக்கு, தூங்கும் வசதி, பொதுப் பெட்டிகள்
இருக்கை வசதிஇல்லை
படுக்கை வசதிஆம்
உணவு வசதிகள்உணவு தயாரிப்பு பெட்டி
E-உணவு
காணும் வசதிகள்ரேக் பகிர்தல் 19165/19166 அகமதாபாத்-தர்பங்கா சபர்மதி எக்ஸ்பிரஸ்
சுமைதாங்கி வசதிகள்இல்லை
மற்றைய வசதிகள்இருக்கைக்கு அடியில்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஎல்.எச்.பி பயணிகள் பெட்டி
பாதைஅகலப் பாதை (1676mm)
வேகம்சராசரி வேகம் மணிக்கு 46 கிலோ மீட்டர்

19167 / 19168 அகமதாபாத்-வாரணாசி எக்ஸ்பிரஸ் (Ahmedabad-Varanasi Sabarmati Express), மேற்கு இந்தியாவின் அகமதாபாத் நகரத்தையும், வட இந்தியாவின் வாரணாசி நகரத்தையும், ஜான்சி வழியாக இணைக்கும் விரைவுத் தொடர் வண்டி ஆகும். இது 1592 கிலோ மீட்டர் பயணத் தொலைவை, சராசரியாக 44 கிலோ மீட்டர் வேகத்தில், 34 மணி 35 நிமிட நேரத்தில் கடக்கிறது. இது அகலப் பாதையில், மின்சாரத்தில் ஓடும் தொடர் வண்டியாகும்.இவ்வண்டி வாரத்தின் நான்கு நாட்களான திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் அகமதாபாத்திலிருந்து புறப்படுகிறது. இது 50 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

பயண அட்டவணை

வண்டி எண் 19167 அகமதாபாத் தொடருந்து நிலையத்திலிருந்து (ADI) திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் இரவு 11.10 மணி அளவில் புறப்படுகிறது.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 19168 வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து (BCY)செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.15 மணி அளவில் புறப்படுகிறது.

வழித்தடங்கள் மற்றும் நிறுத்தங்கள்

பெட்டிகள் விவரம்

சபர்மதி எக்ஸ்பிரஸ் 21 பெட்டிகள் கொண்டது.[1]

  • 1 அடுக்கு குளிர்சாதனப் பெட்டி 1
  • 2 அடுக்கு குளிர்சானப் பெட்டி 1
  • 3 அடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் 6
  • தூங்கும் வசதி பெட்டிகள் 8
  • முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகள் 4
  • என்சினுக்கு பின்னாள் முன்பதிவு இல்லாத இருக்கையுடன் கூடிய பார்சல் / ஜெனரேட்டர் பெட்டி 1

வரலாறு

27 பிப்ரவரி 2002 அன்று காலையில் வாரணாசியிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடருந்து கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த போது, சமூக விரோதிகள் ஒரு பெட்டியில் நெருப்பு வைத்த காரணத்தால், பயணிகளில் 55 பேர் தீக்காயத்தால் கொல்லப்பட்டனர். [2][3]இதனால் குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Sabarmathi Express
  2. [1] BBC News
  3. The Godhra conspiracy as Justice Nanavati saw it The Times of India, 28 September 2008. Retrieved 2012-02-19. Archived 21 February 2012.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya