சரந்தா காடுகள்சரந்தா காடு என்பது இந்திய மாநிலமான சார்க்கண்டில் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த காடாகும். இந்தப் பகுதி சிங் தியோ குடும்பத்தின் ( சாராய்கேலாவின் முந்தைய அரச குடும்பம்) தனியார் வேட்டை இருப்பிடமாக இருந்தது. இந்த காடு 820 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] சரந்தா (செரெங்டா) என்பதற்குப் பாறையிலிருந்து வரும் நீர் என்று பொருள் [2] இங்கு 550 m (1,800 அடி) உயரத்தில் வனப்பகுதியின் நடுவே தல்கோபாத் என்ற இயற்கையழகு நிறைந்த ஒரு கிராமம் உள்ளது.[1] தல்கோபாத் கிராமம் மனோகர்பூரிலிருந்து சுமார் 46 km (29 mi) -ஆகவும், ஜாம்சேத்பூரிலிருந்து சுமார் 160 km (99 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. இப்பகுதியில் இரும்புத் தாது உட்பட சுரங்க நகரங்களான குவா, சிரியா, கிரிபுரு, நோமுண்டி ஆகிய நகரங்களில் ஹோ இனப் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். குங்கிலியம் (சால்) இப்பகுதியில் மிக முக்கியமான மரமாகும். மேலும் இப்பகுதியில் பாறை மண் அதிகளவில் காணப்படுகிறது. இங்குள்ள சால் மரமானது இலையுதிர் மரமாகும். மற்றும் கோடைகாலத்தின் ஆரம்பத்தில் அதன் இலைகளை உதிர்த்து விடுகிறது எனினும் இப்பகுதியிலுள்ள காடுகளின் வளர்ச்சி பொதுவாக எப்பொழுதும் பசுமையானதாகவே உள்ளது. சரந்தா காடுகளில் மாம்பழம், நாவல் மரம், பலாப்பழம், கொய்யா போன்ற மரங்கள் உள்ளன. இதர முக்கியமான மரங்கள் இலுப்பை, குசும், திலாய், ஹரின் ஹாரா ( Armossa rohitulea), குலார் ( பைக்கஸ் glomerata ), மற்றும் கரு மருது. ஆகிய மரங்களும் உள்ளன.[3] பாதுகாக்கப் பட்ட வனப்பகுதி பல விலங்குகளின் இருப்பிடமாகும். இப்பகுதியின் சரந்தா மற்றும் போராஹத் காடுகளில் காட்டு யானைகள் பொதுவாகக் காணப்படுகின்றன. கடமான் மற்றும் புள்ளிமான் மந்தைகள் எப்பொழுதும் காடுகளைச் சுற்றித் திரிகின்றன. காட்டெருது இங்கு இன்னும் காணப்படுகிறது. புலிகள் எப்பொழுதும் ஏராளமாக இல்லை எனினும் இங்குஅவை ஒரு குறிப்பிட்ட அளவில் வசிக்கின்றன். சிறுத்தைகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன.[4] சரந்தா காடுகளின் மனிதர்கள் நுழையவியலாத, வசிக்கவியலாத 1100 ஹெக்டேர் காடுகளில் சுமார் 40% காடுகள் இங்குள்ள இரும்புத்தாது எடுப்பதற்காகச் சுரங்கங்கள் தோண்டி வெட்டியெடுக்கக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. சுரங்க குத்தகைக்கு மேலும் பல புதிய ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள். சரந்தாவின் காடு பல யானைகளின் வாழ்விடமாகும். மேலும் ஒடிசா வின கேந்துஜர் மாவட்டத்தைச் சேர்ந்த யானைகளின் வாழ்விடங்களோடு ஒன்றுக்கொன்று ஒட்டிய தொடர்புடையவை. கரோ மற்றும் கய்னா என்ற வற்றாத ஆறுகள் இந்த வனப்பகுதிகளில் பாய்கின்றன. எனவே இங்கு பலவிதமான மலர் தாவரங்கள் மற்றும் விலங்கின வளங்களின் ஆதாரமாக இப்பகுதித் திகழ்கிறது. இருப்பினும் 70-80% காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன; மரங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன; இன்று இந்தத் தளம் சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது இந்த பகுதி முன்னர் மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் இயக்கங்களால் பிரச்சனைக்குரியதாக இருந்தது. ஆனால் அண்மைய ஆண்டுகளில் பிரச்சினைகள் தணிந்தன. மேலும் இது ஒரு முக்கிய சுற்றுலா மையமாகவும் மாறியுள்ளது. மனோகர்பூர் பகுதியில் பல சுற்றுலா இடங்கள் உள்ளன. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்கள் இங்கு சுற்றுலா செல்ல ஏற்றகாலமாகும்.[5] சரந்தா வளர்ச்சித் திட்டம்சரந்தா அபிவிருத்தி திட்டம் (எஸ்.டி.பி) என்பது சரந்தா காட்டில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களை வளர்ச்சியடையச் செய்வதற்கான ஒரு திட்டமாகும். மாவோயிஸ்டுகளின் பல பயிற்சி முகாம்கள் அங்கு அமைந்துள்ளன.[6] 56 கிராமங்களில் 36,500 மக்கள் தொகையுடன் சுமார் 7000 பழங்குடி குடும்பங்கள் உள்ளன. சரந்தா அபிவிருத்தி திட்டத்தின் முக்கிய கூறுகள் பின்வருமாறு:[7]
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia