பாரசுநாத்
பாரசுநாத் (Parasnath) என்பது பாரசுநாத் மலைத்தொடரில் உள்ள ஒரு மலைச்சிகரம் ஆகும். இந்தியாவின் சார்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிடீக் மாவட்டத்தில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமியின் கிழக்கு முனையை நோக்கி இச்சிகரம் அமைந்துள்ளது.[2]. இதன் மலை உச்சியில் சிக்கார்சி சைன கோவில் உள்ளது,. இது ஒரு முக்கியமான சைன திருத்தலம் ஆகும்[3]. சார்கண்டின் உயரமான சிகரம்1365 மீட்டர் உயரமுள்ள பாரசுநாத் சார்கண்ட் மாநிலத்தின் மிக உயரமான ஒரு மலை உச்சியாகும். எவரெசுட்டு சிகரத்திற்கு வடக்கே 450 கி.மீ தூரத்திலிருந்து இச்சிகரம் ஒரு தெளிவான நாளில் ஒரே நேர்க்கோட்டில் புலப்படாது என கோட்பாடுகள் தெரிவிக்கின்றன [4]. பாரசுநாத் ரயில்நிலையத்திலிருந்து இம்மலைக்கு எளிதில் செல்லலாம். இப்பகுதியில் நீர்வீழ்ச்சி மற்றும் பிற ஈர்க்கும் சுற்றுலா தலங்களும் உள்ளன[5]. மாநிலத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் பாரசுநாத் சிகரமும் ஒன்றாகும். சமணத்தை பின்பற்றுபவர்களுக்கு வழிபடுவதற்கான ஒரு முக்கிய இடமுமாகும் [5]. ஒவ்வோர் ஆண்டும் இத்தலத்தின் புகழும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. சூலை மாதம் முதல் மார்ச்சு மாதம் வரையிலான மாதங்கள் இத்தலத்தைப் பார்வையிட சிறந்த மாதங்கள் ஆகும் [6]. சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களில் 20 பேர் இம்மலைச் சிகரத்தில் முக்தி பெற்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia