சோகராய் மற்றும் கோவர் ஓவியம்![]() சோகராய் மற்றும் கோவர் ஓவியம் (Sohrai and Khovar painting) என்பது சார்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பாரம்பரியமாகப் பெண்களால் வரையப்படும் சுவரோவியக் கலையாகும்.[1][2] இந்த ஓவியங்கள் பாரம்பரியமாகக் குடிசைச் சுவர்களை அலங்கரிக்க பயன்படுகிறது. இதனைக் காகிதத்திலும் துணியிலும் கூட வரைவார்கள். காகிதம் மற்றும் துணிகளில் வரையப்படும் ஓவியங்களை புரவலர்களுக்கு விற்று பெண்கள் வரிவாய் ஈட்டுகின்றனர்.[3] சோகராய் ஓவியம், சோகராய் எனப்படும் அறுவடை திருவிழாக்களின் போது வரையப்படுகிறது.[3] இந்த ஓவியங்கள் வண்ணத்தில் வரையப்படுகிறது. கோவர் ஓவியம் திருமணங்களில், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வரையப்படுகிறது.[4][5] வரலாறுஇந்தக் கலையானது சமஸ்கிருதி அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தை நிறுவிய புலு இமாமால் பிரபலப்படுத்தப்பட்டது.[3][6] 2018ஆம் ஆண்டில், சார்க்கண்டு அரசு தொடருந்து மற்றும் அரசாங்க கட்டிடங்களை சோகராய் ஓவியங்களால் அலங்கரிக்கும் திட்டங்களை அறிவித்தது.[7] இவை 2020-ல் புவியியல் சார்ந்த குறியீட்டினைப் பெற்றது.[8] ![]() செயல்முறைசுவர்களில் முதலில் மண் மற்றும் சாணம் கலந்த கலவை பூசி, பின்னர் வர்ணம் தீட்டப்படும்.[4] ![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia