சலடின் மாகாணம்சலடின் அல்லது சலா அட் தின் கவர்னரேட் ( அரபி: صلاح الدين சலாஹ் அட் தீன்) என்பது ஈராக்கின் ஒரு மாகாணம் ஆகும். இது ஈராக்கின் தலைநகரான, பாக்தாத்தின் வடக்கில் உள்ளது. மாகாணத்தின் பரப்பளவு 24,363 சதுர கிலோமீட்டர்கள் (9,407 sq mi) . 2003 இல் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 1,042,200 பேர். இதன் தலைநகரம் திக்ரித் ஆகும். மாகாணத்தின் பெரிய நகரமாக சாமர்ரா உள்ளது. 1976 க்கு முன்னர் இந்த மாகாணமானது பாக்தாத் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த மாகாணத்திற்கு முஸ்லீம் மன்னரான சலாகுத்தீன் (நவீன அரபு லத்தீன் விளக்கத்தில் எழுதப்பட்ட சலா அட்-தின் ) பெயரிடப்பட்டது. இவர் சிலுவைப் போர் வீரர்களை தோற்கடித்த முஸ்லீம் மன்னராவார். இவர் இந்த மாகாணத்தைச் சேர்ந்தவராவார். சலாம் அட் தின் மகாணமானது சதாம் உசேனின் சொந்த மாகாணம் ஆகும். அவர் திக்ரித் அருகே அல்-அவ்ஜா என்ற ஊரில் பிறந்தார். கண்ணோட்டம்![]() சலாடின் மாகாணத்தில் பல முக்கியமான சமய மற்றும் கலாச்சார தளங்கள் உள்ளன. மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான சாமர்ராவில் அல்-அஸ்காரி கோவில் (இந்த முக்கியமான மத தளத்தில் சியா இஸ்லாத்தின் 10 ஆம் மற்றும் 11 ஆம் ஷியா இமாம்கள் அடக்கத் தலம்) உள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள சாமர்ராவின் பெரிய பள்ளிவாசலானது அதன் தனித்துவமான மால்வியா மினாருக்கு புகழ்பெற்றது. கி.பி 9 ஆம் நூற்றாண்டில் சமரா நகரானது அப்பாசியக் கலிபத்தின் தலைநகராக இருந்தது, இன்று அப்பாஸிட் சமர்ரா யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் தளமாக உள்ளது. பண்டைய புது அசிரியப் பேரரசு கால அசீரிய நகரமான அசூர் டைக்ரிஸ் ஆற்றின் கரையில் இந்த மாகாணத்தைச் சேர்ந்த அல்-ஷிர்கத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாகாணத்தின் பிற தளங்களானது சமர்ராவின் வடக்கே சிலுவைப்போர் டோம் (القبة الصلبية) மற்றும் அல்-அஷாக் அரண்மனை (قصر العاشق) ஆகியவை அடங்கும். 2014 சனவரியில், சலாடின் மாகாண மாவட்டமான துஸ் குர்மாத்துவை புதிய மாகாணமாக மாற்றும் திட்டம் தீட்டப்பட்டது.[1] இந்த திட்டத்தை பிரதமர் நூரி அல்-மாலிகி அறிவித்தார், ஆனால் அவருக்கு பின்வந்த ஹைதர் அல்-அபாடி அதை நடைமுறைப்படுத்தவில்லை. அவர் 2014 ஆகத்தில் மாலிகை பழையபடியே இந்தமாகாணத்தில் இருக்குமாறு செய்தார்.[2] தன்னாட்சி2011 அக்டோபரில், சலாடின் மாகாணமான அரசாங்கம் ஈராக்கிற்குள் தன்னை ஒரு அரை தன்னாட்சி பிராந்தியமாக அறிவித்துக்கொண்டது. மத்திய அரசு "மாகாண சபை மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு" பதிலடியாக வந்த அறிவிப்பு இது என்று மாகாண அரசாங்கம் விளக்கமளித்தது.[3] பெருமளவில் சுன்னி இசுலாம் மக்கள் வாழும் மாகாணமாக இருக்கும் சலாடின், ஈராக்கிற்குள் தங்களை ஒரு தன்னாட்சி பிராந்தியமாக அறிவிப்பதன் மூலம், அது அரசாங்க நிதியத்தின் பெரும் பகுதியை பெறும் என்று நம்புகிறது. அவை தன்னுடைய சுயாட்சி உரிமை கோரலில் " ஈராக்கின் அரசியலமைப்பு பிரிவு 119 " ஐ மேற்கோளிட்டுள்ளது, அதில் "மாகாண சபை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது வாக்காளர்களில் பத்தில் ஒரு பகுதியினர் ஒரு பிராந்தியத்தை உருவாக்கக் கோரினால்" ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் [மாகாணங்களுக்கு] ஒரு பிராந்தியத்தில் ஒழுங்கமைக்க உரிமை உண்டு "என்று கூறுகிறது.[4] மாகாண அரசு
மாவட்டங்கள்![]()
நகரங்கலும், மாநகரங்களும்
மக்கள் தொகை2003 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப்படி, சலாடின் கவர்னரேட் மாவட்டங்களின் மக்கள் தொகையை பின்வரும் அட்டவணை காட்டுகிறது. துஜெயில் மாவட்டத்திற்கு தரவு எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் காண்ககுறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia