சிங்காரத்தோப்பு
சிங்காரத்தோப்பு என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 98.7 மீட்டர் உயரத்தில் 10°49′27″N 78°41′53″E / 10.8241°N 78.6980°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருச்சிராப்பள்ளியில் இவ்வூர் அமைந்துள்ளது. முக்கியத்துவம்மலைக் கோட்டை, தாயுமானவர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகியவை இப்பகுதியிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். சென்னை நகருக்கு தியாகராய நகர் முக்கியத்துவம் வாய்ந்தது போல, திருச்சிக்கு சிங்காரத்தோப்பு வணிக முக்கியத்துவம் வாய்ந்தது. மிகச் சிறிய பொருட்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தும் இங்கு மலிவான விலையில் கிடைக்கும்.[1][2] தமிழ்நாட்டின் அரசு கைத்தொழில் வளர்ச்சி நிறுவனமான 'பூம்புகார்' விற்பனை நிலையத்தின் கிளை ஒன்று சிங்காரத்தோப்பு பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு ஆண்டுதோறும் கலைநயம் மிக்க கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.[3] பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்நெரிசல் மிகுந்த வணிகப் பகுதியான சிங்காரத்தோப்பு பகுதியில் 4,000 ச.மீ. பரப்பளவில் ரூ.19.70 கோடி செலவில் நான்கு அடுக்குகள் கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 536 இருசக்கர வாகனங்கள் மற்றும் 138 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.[4] தேர்தல் தொகுதிகள்சிங்காரத்தோப்பு பகுதியானது, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia