சியாம்லால் யாதவ்
சியாம்லால் யாதவ் (1 மே 1927 - 6 மே 2005) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 8வது மாநிலங்களவையின் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இந்தியத் தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) கட்சியின் உறுப்பினராக இருந்தார். பின்னணியாதவ் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் பிறந்தார். யாதவின் தொழிலால் வழக்கறிஞராகும். தனது ஆரம்பக் காலத்தில் அரசியல் சாராத பல பதவிகளை வகித்தார். இவர் மாவட்ட கூட்டுறவு மேம்பாட்டுக் கூட்டமைப்பின் (வாரணாசி) இயக்குநராகவும், உ.பி. அரிசன நல வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர், உத்தரப்பிரதேச அரசின் இந்தி சமிதி தலைவராகவும் இருந்துள்ளார். அரசியல்இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு சியாம்லால் யாதவ் அரசியலில் நுழைந்தார். தனது அரசியல் வாழ்க்கையில், உத்தரப்பிரதேச சட்டமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பணியாற்றினார். இவர் சட்டமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல இலாகாக்களை வகித்தார். காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கம்யாதவ் லண்டன் மற்றும் ஐல் ஆஃப் மேனில் நடைபெற்ற 19 (1973) மற்றும் 30வது (1984) காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டிற்கான இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகளுள் ஒருவராக இருந்தார். நாடாளுமன்ற மாநாடுகள்இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் உறுப்பினராக யாதவ், நாடாளுமன்ற மாநாடுகளிலும் பங்கேற்றார். ஹவானா மற்றும் ரோமில் முறையே நடைபெற்ற 68வது (1981) மற்றும் 69வது (1982) மாநாடுகளில் கலந்து கொண்டார். வகித்தப் பதவிகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia