சிவகிரி (ஈரோடு)
சிவகிரியில், ஸ்ரீ காமாக்ஷிஅம்மன் திருக்கோயில், ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் ஆகியவை உள்ளன. மேலும் 18 சித்தர்களில் ஒருவரான புலிப்பாணி சித்தருக்கு, சுனைகுன்றில் கோவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில், விசைத்தறி நெசவு மற்றும் விவசாயம் சார்ந்த இயந்திர தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அமைவிடம்ஈரோடு - வெள்ளக்கோயில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்த சிவகிரி பேரூராட்சி, ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் தெற்கே வெள்ளக்கோயில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 10 கி.மீ. தொலைவில் உள்ள ஊஞ்சலூரில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு23.40 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 49 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,407 வீடுகளும், 17,979 மக்கள்தொகையும் கொண்டது.[4] புவியியல்சிவகிரி பகுதியானது, 11°07′04″N 77°47′17″E / 11.1179°N 77.7881°E[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 222 மீட்டர் (728 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia