செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு
செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு என்பது 1991-96 தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த செயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கள் பற்றிய வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் முடிவில், சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. 24, சூன், 1991 முதல் ஏப்ரல் 4, 1996 வரை முதன் முறையாக தமிழகத்தின் முதல்வராக அவர் இருந்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தன் வருமானத்திற்கு கூடுதலாக சொத்துகளைச் சேர்த்துள்ளதாக அப்போது ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, பிறகு 14, சூன், 1996இல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.[1] அந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை இதனை புலனாய்வு செய்ய ஆணையிட்டார். இச்சொத்துக்களின் அன்றைய மதிப்பு ₹66.65 கோடியாகும். இவ்வழக்கு 1996ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசால் 1996 திசம்பர் அன்று அரசுத்தரப்பு வழக்காக மாற்றப்பட்டது.[2] 1996, டிசம்பர் மாதத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போயசு கார்டனில் உள்ள செயலலிதாவின் வீட்டை வண்ண தொலைக்காட்சி வழக்கிற்காகச்[3] சோதனையிட்டு அசையும் சொத்துக்களான 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 சோடி காலணிகள், 10,500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் மற்றும் சில மதிப்பு மிக்க பொருள்களைக் கைப்பற்றினர். அவை அனைத்தும் சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கியின் காப்பகத்தில் வைக்கப்பட்டன. 1997ஆம் ஆண்டு இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா, சசிகலா, ஜெ. இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது.[4] குற்றம் சாட்டப்பட்டவர்களின் கோரிக்கைப்படி 1997ம் ஆண்டு தமிழக ஊழல் தடுப்பு காவல்துறை தயாரித்த குற்ற அறிக்கை தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.[5] இந்த தீர்ப்பின் காரணமாக தமிழக முதலமைச்சர் மற்றும் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பதவி இரண்டையும் இழந்தார். மேலும் மீண்டும் வி.கே.சசிகலா பரிந்துரைப்படி ஓ. பன்னீர்செல்வத்தை இரண்டாம் முறையாக முதலமைச்சராக ஆக்கினார். வழக்கின் காலவரிசை1996
1997
2000
2001
குறிப்பு: இக்காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பணியாற்றினார். 2002
2003
2005
2009*ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2012
2013
2014
பெங்களூர் நீதிமன்றம்விசாரணையும் குறுக்கு விசாரணையும் முடிந்த அரசு தரப்பு சாட்சிகள் 76 பேரை மீண்டும் விசாரித்ததில் 64 சாட்சிகள் பிறழ்ந்தன (மாற்றி கூறின) இதனால் வழக்கு பலவீனம் அடைந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பிறழ் சாட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எதையும் எடுக்க முனையவில்லை.[7]. திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் 2003ல் நியாயமான முறையில் இவ்வழக்கு நடைபெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை கேட்டதால் இவ்வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.[8] சர்ச்சைகள்நீதிபதிகள்சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் இவ்வழக்கை விசாரித்தவர் சம்பந்தம் அவர்கள் ஆவார். அவருக்கு அடுத்து ஆறுமுகப் பெருமாள் விசாரித்தார். இவ்வழக்கின் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக பாலகிருஷ்ணன் இருந்தார். அவரின் பணி காலம் முடிந்ததை அவருக்கு பணி நீடிப்பு செப்டம்பர் 30லிருந்து வழங்க உச்ச நீதிமன்றம் கேட்டும் அவருக்கு பணி நீடிப்பு வழங்காமல் கர்நாடக அரசு ஜான் மைக்கேல் டி'குன்ஹாவை நீதிபதியாக நியமித்தது. பாலகிருஷ்ணனும் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர் என அன்பழகன் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.[9] அரசு சிறப்பு வழக்கறிஞர்இவ்வழக்கின் முதல் சிறப்பு வழக்கறிஞர் பி. வி. ஆச்சாரியா 2012, ஆகத்து அன்று பதவி விலகியதை அடுத்து பவானி சிங் சிறப்பு வழக்கறிஞரானார். தன் பதவி விலகலுக்கு அப்போதைய கருநாடக பாசக அரசு தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். எதிர்காலத்தில் அதிமுகவுடன் பாசக அரசியல் உறவு கொள்வதற்காக பாசக அரசு அவ்வாறு நடந்து கொண்டதாக கூறினார்[10] 2013, ஆகத்தது 26 அன்று பவானி சிங்கை நீக்கியதை எதிர்த்து செயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியதில் பவானி சிங்கை நீக்கியது தவறு என்றும் மீண்டும் அவரை அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆக ஆக்கும்படியும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[11][12] அன்பழகன்அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு தான் உதவ அனுமதிக்க கோரிய அன்பழகனின் மனுவை 2013, ஆகத்து 21 அன்று நீதிபதி பாலகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். அன்பழகன் தனக்கு உதவுவது வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் அவர் தனியாக நீதிமன்றத்தில் வாதாடுவதை தான் ஏற்கமுடியாது எனவும் பவானி சிங் கூறினார்.[13] ஊடகங்கள் தந்த முக்கியத்துவம்தமிழக முதல்வர் தொடர்புடைய இச்செய்திக்கு தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.[14] தீர்ப்பு1991-96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் செயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 27, 2014 அன்று செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது.[15][16][17] இதற்கு முன்னர், 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கின் தீர்ப்பு 2014, செப்டம்பர் 20ந் தேதி அறிவிக்கப்படும் என பெங்களூரிலுள்ள சிறப்பு நீதி மன்றத்தின் நீதிபதி மைக்கேல் குன்கா அறிவித்திருந்தார். தீர்ப்பு நாளன்று குற்றஞ்சாட்டப்பட்ட செயலலிதா, வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகிய நால்வரும் நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.[18] பாதுகாப்புக் கருதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பு 2014 செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக பெங்களூரிலுள்ள சிறப்பு நீதி மன்றத்தின் நீதிபதி மைக்கேல் குன்கா அறிவித்திருந்தார். தீர்ப்பு செப்டம்பர் 27 அன்று பிற்பகல் மூன்று மணிக்கு அறிவிக்கப்பட்டது. செயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. செயலலிதாவிற்கு ₹100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ₹10 கோடியும் தண்டமாகவும் அனைவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது [19]. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம் இரண்டாண்டுகளுக்கு மேல் இருப்பதால் ஜெயலலிதா முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்தார். இத்தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே சிற்சில வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.[20] தீர்ப்பு விபரங்கள்நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள விபரங்களில் சில[21]. [22][23]
பிணை மனுஜெயலலிதாவுக்கான பிணை மனுவை பெங்களூரு நீதிமன்றம் 7-10-2014 மதியம் 2.30க்குப் பின்னர் நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு பிணை வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தண்டனையைத் தடை செய்யும் மனுவும் பிணை கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார்.[24]. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு 2014, டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தில் செயலலிதாவின் பிணைக்காக வாதாடியவர் பாலி சாம் நரிமன். ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம்.2014, அக்டோபர் 17 (வெள்ளிக்கிழமை) அன்று உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நடைமுறைகளை நிறுத்திவைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.[25] 2015 (மேல் முறையீடு)
மேல் முறையீட்டில் விடுதலைமேல் முறையீட்டில் நீதிபதி குமாரசாமி செயலலிதா மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை எனக்கூறி விடுதலை செய்தார். [35][36][37] உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
மேல்முறையீட்டில் தீர்ப்பு2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சசிகலா உட்பட நான்குபேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதில் நான்கு பேரில் செயலலிதா மட்டும் இறந்ததை அடுத்து வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. [42] உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகியோர் பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலையில் 15 பிப்ரவரி 2017 அன்று அடைக்கப்பட்டனர். சீராய்வு மனுசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்டாலும் ரூபாய் 100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் 22 மார்ச் 2017-இல் சீராய்வு மனு செய்துள்ளது. [43] ஜெ. இளவரசிஜெ. இளவரசி, ஜெயலலிதாவின் தோழியான வி. கே. சசிகலாவின் மூத்த அண்ணன் ஜெயராமன் என்பவரின் மனைவி ஆவார். [44] ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் இளவரசின் கணவர் ஜெயராமன் மேற்பார்வையாளராக இருந்த போது, டிசம்பர், 1991-ஆம் ஆண்டில் மின்சாரம் தாக்கி இறந்தார். எனவே விதவையான இளவரசியை ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தன்னுடன் இருத்தி அடைக்கலம் கொடுத்து வைத்துக் கொண்டார். சொத்து குவிப்பு வழக்கில்ஜெயலலிதாவுடன் கூட்டுச் சதி செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சொத்து குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட இளவரசி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பின்னர் மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பின்னர் கர்நாடகா அரசு, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்யுமாறு இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 15 பிப்ரவரி 2017 அன்று உச்ச நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்ததுடன், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, இளவரசிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு,[45] 16 பிப்ரவரி 2017 அன்று கர்நாடகா மாநில பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலையில் இளவரசியுடன் வி. கே. சசிகலா மற்றும் வி. என். சுதாகரனும் அடைக்கப்பட்டனர். சொத்து பறிமுதல் நடவடிக்கைநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கையை முடிக்கி விட்டுள்ளது. [46] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia