செ. ராஜேஷ் குமார்
செ. ராஜேஷ் குமார் (S. Rajeshkumar) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக ஆவார். இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 15வது சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.[1][2][3][4] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கிளியூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5] 2016 சட்டமன்றத் தேர்தல்2016 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 46,295 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். 2021 சட்டமன்றத் தேர்தல்2021 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமாக வேட்பாளரை 55,400 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். கிள்ளியூர் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia