தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
தமிழகத்தில் 72.81% வாக்குகள் பதிவாயின. தேர்தலுக்கு முன்னும் பின்னும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கணித்தன. 2021 மே 2 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன; ம.மு.கூ 159 இடங்களைக் கைப்பற்றியது, இவற்றில் திமுக 125 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்து, தனிப் பெரும்பான்மையைப் பெற்றது.
அதிமுக–பாஜக தலைமையிலான தே.ச.கூ 75 இடங்களை வென்றது, இதில் 65 இடங்களை அதிமுக வென்றது. பத்தாண்டுகால அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தது, ஆறாவது முறையாக திமுக மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் அவரது அமைச்சரவை மந்திரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களோடு மே 7, 2021 அன்று பதவியில் பொறுப்பேற்று கொண்டனர்.
அதை தொடர்ந்து (2011–2016) அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா சிறந்த நல்லாட்சி செய்ததால். அடுத்து நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில்அஇஅதிமுக தொடர் வெற்றி, தொடர் ஆட்சி பெற்று தனது பெரும்பான்மையை 135 இடங்களுடன் தக்க வைத்துக் கொண்டது.
இத்தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து 98 தொகுதிகளை கைப்பற்றி பலமான எதிர்கட்சியாக செயல்பட்டது.[9]
2021 இன் 16-வது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் இறப்பின் பின்னர் நடைபெறும் முதலாவது மாநிலத் தேர்தல் ஆகும்.
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88,936 ஆக அதிகரிக்கப்படும்.[12]
80 வயது முதியோர்கள் வழக்கமான வாக்குப் பதிவு செய்வதுடன், விருப்பப்பட்டவர்கள் தபால் வாக்கும் செலுத்த அனுமதிக்கப்படுவர்.[13]
தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும்.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 24 மணி நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
திமுக சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது.[14]
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி,[16][17]சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிகபட்சமாக 694,845 வாக்காளர்கள் உள்ளனர்.[16][18]
2021 தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள்
பொது வாக்காளர்கள்
சேவை வாக்காளர்கள்
வெளிநாட்டு வாக்காளர்கள்
மொத்தம் வாக்காளர்கள்
6,27,47,653
72,853
3,243
6,28,23,749
2021 தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள்
பெண் வாக்காளர்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம் வாக்காளர்கள்
3,09,95,440
3,19,40,880
7,192
6,29,43,512
தேர்தல் வாக்குறுதிகள்
அஇஅதிமுக வாக்குறுதிகள்
அதிமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 163 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கியது.[19][20]
திமுக வாக்குறுதிகள்
திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும் வழங்கியுள்ளது.[21][22]
வாக்குறுதிகள்
வாக்குறுதி
நிலை
திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்!
கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும்!
முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
சென்னையில் திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது.
கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மசூதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் படி முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றிக் காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கும் உடனடி பணி நியமனம் செய்யப்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.
32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும்.
ஏழை மக்கள் பசி தீர, முதல் கட்டமாக 500 இடங்களில் 'கலைஞர் உணவகம்' அமைக்கப்படும்.
நடைபாதைவாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியமர்த்தி கால முறை ஊதியம் வழங்கப்படும்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டமும், வருமுன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும்.
தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும்.
கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு அலுவர்கள், முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி, ரூ.3 லட்சம் என்பது ரூ.5 லட்சம் ஆக்கப்படும்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும்.
பத்திரிகையாளர் மற்றும் ஊடகத் துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்.
பத்திரிகையாளர், ஊடகத்துறையினர் ஓய்வூதியமும் குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும்.
சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்களாக செயல்படும்.
ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 80 வயதுக்கு மேல் 20 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதனை 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும் வழங்குவோம்.
வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும்.
அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.
சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி வரும்.
புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும். கனிமங்கள், தாது மணல், மணல் ஆகிய தொழில்கள் அமைத்தும் டாமின் நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும்.
அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் கைக்கணினி வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் வை-ஃபை வசதி செய்து தரப்படும்.
அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 4000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
உழவர் சந்தைகளுக்கு உயிரூட்டப்பட்டு, அது அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
நீர்ப்பாசனத் துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்.
நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திடச் சட்டம் கொண்டு வரப்படும்.
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் 10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.
ஏழை - எளிய, சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
அ.தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீர்செய்ய பொருளாதார உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
மீனவர் சமுதாயத்தினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
அம்மையார் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.
சென்னை நகரை வெள்ளப்பெருக்கத்தில் இருந்து பாதுகாக்க, சென்னைப் பெருநகர் வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.
வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய் வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
தமிழ் எழுத்து வரிவடிவம் சிதைக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலகநாடுகளை மத்திய அரசு வலிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பேண வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்.
மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
அரசு பள்ளி, கல்லூரி மாணவியர்க்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.
பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பு 25 லட்சமாக உயர்த்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம்.
ஆகிய முக்கியமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்று பெயரிடப்படும். எனவும் அறிவிக்கப்பட்டது.[26]
அரசியல் நிலவரம்
தமிழ்நாட்டில் சுமார் 50 வருடமாக வென்று ஆட்சி அமைக்கும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முதலமைச்சர்களான மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா என்கிற பெரும் அரசியல் ஆளுமை தலைவர்களின் மரணத்திற்கு பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில்அதிமுகவில் தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பதவியேற்ற 6 மாதகாலங்களிலே அவர் எவ்வித உடல் உபாதைகளும் இல்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5,2016 ஜெயலலிதா உயிரிழந்தது தமிழக மக்களிடையே பெரும் அனுதாப வருத்தத்தையும், தீராத கண்ணீர் மழையிலும் சிக்க வைத்து மட்டுமில்லாமல் அவரது மர்ம மரணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அந்த ஆறு மாதகால ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளாக கூறிய அனைத்து வீடுகளிலும் 100 சதவீதம் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை நடைமுறைபடுத்தினார்.
பின்பு சென்னை மக்கள் நெரிசலை சரிசெய்யும் விதமாக முந்தைய திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்டு மோனோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
அதை நடைமுறைப்படுத்தும் விதமாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மோனோ ரயில் திட்டம் அதிக கனரக வேலை கட்டமைப்பு நில அதிர்வு போன்ற இயற்கை உபாதைகளுக்கு எதிரான திட்டமானதால் அதை தவிர்த்து விட்டு மெட்ரோ ரயில் திட்டம் ஆக செயல்படுத்தி சென்னை மாநகரில் முதல் முறையாக துவக்கிவைத்தார்.
பின்பு பல தேர்தல் வாக்குறுதிகள் முதல்வர் ஜெயலலிதாவால் நிறைவேற்றப்படும் என்று தமிழக மக்கள் நினைத்து கொண்டிருக்கும் போது பேரிடியாக அவரது எதிர்பாராத மரணம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது அதிமுக ஆட்சியிலும், கட்சியிலும் பல தலைமை மாற்றம் குழப்பங்கள் நடந்தேறியது.
முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அவரது முதல்வர் பதவியை அனுபவிக்கும் பொருட்டு அவரது அரசியல் விசுவாசியும், நீதித்துறை அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக தனது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஜெயலலிதாவின் மரணத்தின் அன்றே பதவியேற்று கொண்டது பல விமர்சனங்களுக்கும், தீராத அரசியல் சர்ச்சைகளுக்கும் உள்ளானது.
இதனால் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட நேரத்தில் ஜெயலலிதா சமாதியில் சென்று கண்ணீர் தர்மயுத்தம் நடத்தியது பெரும் சர்ச்சையானது.
மேலும் பன்னீர் செல்வத்தின் அச்செயலை கண்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வி. கே. சசிகலா தலைமையில் பாதுகாக்கப்பட்ட கூவத்தூர் சொகுசு பங்களாவில் கட்சி தாவல் நடக்காமல் வி. கே. சசிகலா தனது தலைமையில் கட்சியையும், முதல்வர் பதவியையும் தன்வசபடுத்தும் நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர் கடந்த காலத்தில் ஜெயலலிதாவோடு இணைந்து செய்த சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு அவருடன் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் அனைவரும் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சமயத்தில் சசிகலா தனது உறவினரான தினகரனை முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் அதை அதிமுக கட்சி தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியிடமே ஒரு மனதாக முதல்வர் பதவிக்கு சசிகலா பரிந்துரைத்தார்.
இதனால் தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் 106 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
இதை எதிர்கட்சி திமுக சட்டமன்றத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தனது ஆளுமையை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிருபிக்க வேண்டும். என கூறியவுடன் ஸ்டாலினை பலவந்தமாக அவரை சட்டமன்றத்தில் இருந்து குண்டு கட்டாக காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டார்.
ஆனால் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் கீழ் 117க்கும் குறைவான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்ததால் அதை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தரும் என்று அஞ்சிய எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தார் மேலும் குறைவான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவரை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ் அழைப்பு விடுத்தார்.
இதனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாகவும் ஜனநாயக முறைகேடாகவும் அவரது அதிமுக ஆட்சி கலைக்கப்படாமல் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக பிரதமர் மோடியின் மறைமுகமான ஆதரவால் வரைமுறையற்ற அதிகாரத்தால் நடப்பது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் தமிழக மக்களிடையே பெரும் எதிர்ப்பை எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றது மக்கள் விரோத அரசாக அதிமுக மாறியது.
எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதா பிரதிநிதிகளாக முதல்வராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி கே. பழனிச்சாமியும், துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பன்னீர் செல்வமும் இணைந்தனர்.
பின்பு அம்மையார் ஜெயலலிதா அவர்களால் கட்டிகாக்கபட்ட மாநில சுயாட்சி அதிகாரங்களுக்கு எதிரான மத்திய மோடி அரசால் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரைமுறையற்ற வரிவிதிப்பு, ஒன்ஜிசி விவசாய நிலங்களுக்கும், நலனுக்கும் எதிரான திட்டங்கள் நீட் தேர்வு போன்ற திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசின் அதிகாரத்தால் அடக்குமுறையாக திணிக்கப்பட்டது.
இதனால் பல போராட்டங்களும் மக்கள் எதிர்ப்பும் அதிமுக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக இருந்தது.
மேலும் நீட் தேர்வானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பால் தடைசெய்யப்பட்டது. ஆனால் அந்த தடையை தொடராமல் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசு மத்திய அரசின் திட்டத்திற்கு அடிப்படிந்து நீட் தேர்வு பல அடித்தட்டு விலிம்பு நிலை சிறுபான்மையின மாணவ/மாணவிகளின் தற்கொலை அதிகமாக அதிகரித்தது இது மாணவ கண்மணிகளின் பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
அதிக விலை ஏற்றம் தண்ணீர் பற்றாக்குறைகள் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனைகள். தலையெடுத்து நின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் பல சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மத்திய பாஜக தொண்டர்களால் அரங்கெறியது அதை அதிமுக அரசு தட்டிக்கேட்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது.
கூட்டணி நிலைபாடு
அதிமுக கூட்டணியிலிருந்த தேமுதிக கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் தரப்படாததால் கூட்டணியிலிருந்து விலகியது.[27]
அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது.[28]
அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது.[29]
அதிமுக சார்பில் போட்டியிடும் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. மொத்தம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் முதல்கட்டமாக அதிமுக 6 தொகுதிகளுக்கும், அமமுக 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக.,விற்கு 23 தொகுதிகளும், பா.ஜ.,விற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றன.[30][31]
ஆண்டிப்பட்டி தொகுதியில் இரண்டாவது முறையாக எதிரெதிர் அணியில் சகோதரர்கள் களம் இறங்கினர். 2019-ல் ஆண்டிபட்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன், தனது தம்பி லோகிராஜனை 2 ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[33]
திமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளும், அதன் வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டது.[34]
தொகுதி வழங்கப்படாததால் பாசகவில் சேர்ந்த தற்போதைய திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.[35]
ஆ. ராசா முதல்வரை பற்றி கூறிய சர்ச்சைக்குரிய பேச்சின் விளக்கத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. ஆ. ராசாவின் விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஆ. ராசா 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது. அதேசமயம், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்தும், ஆ.ராசாவை நீக்கியும் உத்தரவிட்டிருந்தது.[36][37]
வேளச்சேரி தொகுதியின் 92 ஆம் எண் கொண்ட வாக்குச்சாவடியின் வாக்குப் பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தேர்தல் விதி மீறல் என்பதால் அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.[38]
அமமுக கூட்டணியில், ஒவைசியின் அகில இந்திய மச்லிசு-இ-இத்தாதுல் முசுலிமின் கட்சி வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட்டது.[39]
அதிமுக கூட்டணி ஆதரவு
ஜெயலலிதா கூறியபடி நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக புதிய நீதிக் கட்சித் தலைவர் அறிவித்தார்.[40]
நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.[42]
ஜாதி இனம் பாகுபாடின்றி ஆட்சிபுரியும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக, தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவித்தது.[43]
தமிழக விவசாயிகளின் தேவை அறிந்து செய்வதால் அதிமுக கூட்டணிக்கு தமிழக விவசாய சங்கம் ஆதரவு தெரிவித்தது.[44]
மேலும் மூவேந்தர் முன்னணிக் கழகம், பசும்பொன் தேசிய கழகம், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, இந்தியத் தேசிய குடியரசு கட்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம், தமிழக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, செங்குந்தர் அரசியல் அதிகாரம் போன்ற அமைப்புகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.[45]
தமிழகத்தில் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்த திமுக கூட்டணியை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.[49]
மதச்சாா்பற்ற ஆட்சி அமைய திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகத் தமிழக மக்கள் முன்னணி தெரிவித்தது.[50]
மத ரீதியாகப் பிளவுபடுத்தி, இந்திய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் பாஜக கூட்டணியை வீழ்த்த திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அறிவித்தது.[51]
மேலும் புதிய திராவிட கழகம்[52], திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கம்[53], புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி[54] போன்ற அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
வேட்புமனு தாக்கல் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலவரங்கள்:
தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள்
நிராகரிக்கப்பட்ட மனுக்கள்
திரும்பப் பெறப்பட்ட மனுக்கள்
7,255
4,274
2,543
438
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் பரப்புரைகள், அவற்றின் தேர்தல் அறிக்கைகள் குறித்த தகவல்கள் இங்கு ஆவணப்படுத்தப்படுகின்றன. உலக சேப்பர்சு சென்னை, அரசியல் பாகுபாடற்ற அமைப்பு இந்த அமைப்பு உலக பொருளாதார மன்றம் இயக்கப்படுகிறது TN Election Promises 2021[55] இந்த தளமானது வாக்களர்களுக்கு தேவையான வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை தொகுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 71.78 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இது முந்தைய 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலை விட 2.03% குறைவு. இதில் மாவட்ட வாரியாக அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் (83.92%) சதவீத வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக சென்னையில் (59.06%) சதவீத வாக்குகளும் பதிவானது.[69] தொகுதி வாரியாக, அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவானது.
வாக்கு எண்ணும் பணி 2021 மே 2 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது, முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதற்கு அரை மணிநேரம் கழித்து, இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் முன்னணி நிலவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம்இசீநே காலை 9 மணி முதல் அறிவிக்கத் துவங்கியது. திமுக 125 தொகுதிகளைக் கைப்பற்றி, தனித்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. அதன் கூட்டணி ம.மு.கூ மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றியது. இதேவேளை ஆளும் தே.ச.கூ 75 இடங்களைக் கைப்பற்றியது. இதில் அஇஅதிமுக 65 இடங்களில் வென்றது. ஏனைய கட்சிகளோ அல்லது சுயேச்சை வேட்பாளர்களோ எந்த ஒரு தொகுதியையும் கைப்பற்றவில்லை. பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த திமுக 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்த அஇஅதிமுக இடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.[70]
கூட்டணி வாரியாக முடிவுகள்
கட்சிகளும் அவற்றின் கூட்டணிகளும் கைப்பற்றிய தொகுதிகளின் எண்ணிக்கை