தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan, பிறப்பு: சூன் 2, 1961) ஓர் இந்திய அரசியல்வாதியும் தெலங்காணா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.[5] புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்திருந்தார்.[6] தமிழிசை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின்[7] மகள் ஆவார். ஆளுநர் பொறுப்பு ஏற்பதற்கு முன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர், மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். இவரே பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்த முதல் பெண் ஆவார். பிறப்புதமிழிசை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் சூன் 2, 1961-ஆம் ஆண்டு குமரி அனந்தன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை படித்து முடித்தார். சௌந்தரராஜன் என்பவரை மணந்தார். இவருடைய கணவரும் ஒரு மருத்துவர் ஆவார். இவர்களுக்குச் சுகநாதன் என்னும் மகன் உள்ளார்.[8] அரசியல் வாழ்க்கை2006, 2011 சட்டமன்றத் தேர்தல்களிலும், 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக வேட்பாளராக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியடைந்தார். 2017 ஆம் ஆண்டு, இந்திய ஒன்றிய அரசு பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராகத் தமிழிசையை நியமித்தது. இந்தப் பதவியில் இவர் மூன்றாண்டு காலம் இருப்பார் என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.[9] தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்
பதவிகள்தெலுங்கானா ஆளுநர்2019-ஆம் ஆண்டு, தமிழிசை சௌந்தரராஜன் தெலங்காணாவின் முதல் பெண் ஆளுநராகவும் இரண்டாவது ஆளுநராகவும் பதவியேற்றார்.[10] இவர் ஆளுநர் பொறுப்பேற்றபோது, அனைத்து மாநில ஆளுநர்களிலும் இவரே வயதில் இளையவராகத் திகழ்ந்தார்.[11] ஏப்ரல் 2023 இல், தெலங்காணா அரசு 10 சட்டமுன்வடிவுகளைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஏழு மாதங்களான பிறகும், தமிழிசை தனது ஒப்புதலை வழங்கத் தவறியதற்காக சௌந்தரராஜனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிப்பேராணை மனு தாக்கல் அரசு செய்தது.[12] புதுச்சேரி துணைநிலை ஆளுநர்தமிழிசை, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக 18 பிப்ரவரி 2021 அன்று கூடுதல் பொறுப்பேற்றார்.[13] சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தமிழிசையை இரகசிய காப்பு உறுதிமொழி ஏற்கச் செய்து ஆளுநர் பதவியேற்கச் செய்தார். ஆளுநர் பதவிகள் விலகல் தமிழிசை, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 2024 மார்ச் 18 அன்று தெலுங்கானா ஆளுநர் பதவியையும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியையும் துறந்தார்.[14] பாஜகவில் இணைந்து மீண்டும் முழுநேர தேர்தல் அரசியலுக்குத் திரும்பினார்.[15] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia