தமிழில் சிற்றிலக்கியங்கள்
தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியம் என்பது கீழ்காணும் அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
இவ்வகையில் பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும். சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர் ஆகும். சமக்கிருதத்தில் பிரபந்தம் என்னும் சொல், "கட்டப்பட்டது" எனப் பொருள்படும். சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கைசிற்றிலக்கியவகைகளின் எண்ணிக்கை தொண்ணூற்றாறு என மரபாக கூறப்படுகிறது. இந்த தொண்ணூற்றாறு வகைகளையும் தாண்டி பலவகை சிற்றிலக்கியங்கள் வளர்ந்தும் விரிந்தும் தொண்ணூற்றாறு என்ற எண்ணிக்கைக் கடந்து பிற்காலத்தில் கூடிவிட்டது. இதன் எண்ணிக்கை குறித்து அறிஞர்களிடையே கருத்து மாறுபாடு உள்ளது. இந்த எண்ணிக்கையானது குறைந்தபட்சம் 186 என்றும் அதிகப்பட்சமாக 417 என்றும் கூறப்படுகிறது. சிற்றிலக்கிய வகைகள்
மற்றும் போன்றனவும் உண்டு மூலம்மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia