மதுரையில் ஓடிய பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தின் நகரப் பேருந்து ஒன்றில் வழங்கப்பட்ட 25 பைசா பயணச்சீட்டு. 1966க்கும் 1981க்கும் இடைப்பட்ட காலத்தியதாக இருக்கவேண்டும். வலதுபுறத்தில் அக்டோபர் 2015இல் வழங்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்.டின் நகரப் பேருந்து பயணச்சீட்டு. பெருமளவுக்கு மின்னணுக் கருவிகள் புழக்கத்துக்கு வந்துவிட்டாலும் இன்னும் இத்தகைய சீட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. துளையிடப்பட்ட நிறுத்துநிலையிலிருந்து எதிர் நிறுத்துநிலை வரை செல்லத்தக்கது, பயணம் முடிந்தவுடன் பெட்டியில் இடவும் போன்ற குறிப்புகள் இப்போது இல்லை. பயணியா, சுமையா என வேறுபடுத்திக் காட்ட வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் - மதுரை
வகை
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை என்பது பாண்டியன் போக்குவரத்து கழகம் ஆகும்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக ,மதுரையில் அரசு டவுன் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது
வரலாறு
1972 ஆம் ஆண்டு பாண்டியன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இப்போக்குவரத்துக்கழகத்திலிருந்து 1974-ம் ஆண்டு 104 பேருந்துகள் பிரிக்கப்பட்டு கட்டப்பொம்மன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு இதிலிருந்து 62 பேருந்துகள் பிரிக்கப்பட்டு சோழன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. மேலும் 1986-ம் ஆண்டு 446 பேருந்துகள் பிரிக்கப்பட்டு இராணி மங்கம்மாள் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.
சேவை வழங்கும் மாவட்டங்கள்
இந்த மதுரை போக்குவரத்துக் கழகமானது நான்கு மாவட்டங்களில் மட்டுமே தனது சேவையை வழங்குகிறது. தமிழகத்தில் மற்ற அரசு போக்குவரத்து கழகங்கள் வருமானத்தை ஒப்பிடும் போது இந்த மதுரை போக்குவரத்து கழக வருமானம் குறைவாகவே காணப்படுகிறது.