தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை![]() தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் - கோவை என்பது தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அமைந்துள்ள எட்டு போக்குவரத்து கழகங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் நெம் 43,மேட்டுப்பாளையம் சாலை,கோயம்புத்தூர் ஆகும்.
வரலாறுசுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் 1965-ஆம் ஆண்டு கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு சேரன் போக்குவரத்து கழகம் என்ற பெயரிலும் ஈரோட்டைத் தலைமையிடமாகக்கொண்டு ஜீவா போக்குவரத்து கழகம் என்ற பெயரிலும் உதகையைத் தலைமையிடமாகக்கொண்டு பாரதியார் போக்குவரத்து கழகம் என்ற பெயரிலும் பேருந்துகள் இயங்கிக்கொண்டு இருந்தது. பின்பு அவைகளை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகமாக 1997 -ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - கோவை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு விளங்குகிறது. மாநகராட்சிகளில் பேருந்து சேவைகோவை கோட்டத்தின் மூலம் மூன்று மண்டலங்களில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளில் பேருந்து சேவை வழங்கப்படுகிறது. இதில் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகர் போக்குவரத்து கழகம் தனது சேவையை வழங்குகிறது. மேலும் திருப்பூர், ஈரோடு ஆகிய மாநகரங்களுக்கு சாதாரண கட்டணத்தில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. போக்குவரத்து மண்டலங்கள்இந்த போக்குவரத்து கழகத்தின் கீழ் பின்வரும் நான்கு மண்டலங்கள் செயல்படுகின்றன.
என்ற எண்களில் பேருந்து போக்குவரத்து சேவைகளை மண்டலங்களின் மூலம் இயக்கிவருகிறது. மண்டலத் தலைமையகம்
மண்டலங்களும் பணிமனைகளும்கோயம்புத்தூர் மண்டலம்
ஈரோடு மண்டலம்
திருப்பூர் மண்டலம்
உதகை மண்டலம் பிற மாநில,மாவட்ட சேவைகள்தமிழகம் மட்டுமின்றி பிற மாநில சேவைகளையும் இந்த அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் கேரளா, கர்நாடக, ஆந்திரா என பிற மாநிலங்களில் தனது சேவைகளை வழங்குகிறது. கேரள மாநிலம்
என கேரள மாநிலத்திற்கு கோவை மண்லடப் போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது. கேரள மாநில அரசு பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் உள்ளது. வெளிமாநில பேருந்து நிலையங்களிலேயே கேரள மாநில பேருந்து நிலையம் தான் பெரிய பேருந்து நிலையம் ஆகும். கர்நாடக மாநில போக்குவரத்து
ஆந்திர மாநில போக்குவரத்து
தமிழ்நாட்டுப் போக்குவரத்துக் கழகங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia